.

Pages

Saturday, June 13, 2020

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் 95 சதவீதம் நிறைவு: அமைச்சர் இரா.துரைக்கண்ணு தகவல்!

அதிரை நியூஸ்: ஜூன் 13
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தகவல் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், விளாங்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 25.2 லட்சம் மதிப்பீட்டில் தூரியார் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் இன்று (13.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர்,  வேளாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சரால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் அறிவிக்கப்பட்டு செயலபடுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இரண்டு நாட்களில் நிறைவடையும். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயக் கடன்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களின் மூலம் 344 கோடி ரூபாய் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், உர மானியம், மானியத்தில் நுண்ணுயிர் உரம் ஆகியவை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, விவசாய பாசனத்திற்காக வருகின்ற 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தன், சண்முகவேலு, உதவிப் பொறியாளர்கள் திலீபன், சிவக்குமார், திருவையாறு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.