அதிராம்பட்டினம், ஜூன் 07
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், தாயகம் திரும்ப தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைதளங்களில் பதிவிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மஜக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், பழைய அஞ்சலக சாலையில் கையில், பதாகை ஏந்தி போராட்டம் இன்று (ஜூன் 07) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் அதிரை சேக் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ஸ்மார்ட் சாகுல் முன்னிலை வகித்தார்.
இதில், மஜக, தமுமுக, எஸ்.டி.பி,ஐ, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று, வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முகக்கவசம் அணிந்து, கையில் பதாகை ஏந்தி முழக்கமிட்டனர். நிறைவில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், தாயகம் திரும்ப தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைதளங்களில் பதிவிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மஜக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், பழைய அஞ்சலக சாலையில் கையில், பதாகை ஏந்தி போராட்டம் இன்று (ஜூன் 07) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் அதிரை சேக் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ஸ்மார்ட் சாகுல் முன்னிலை வகித்தார்.
இதில், மஜக, தமுமுக, எஸ்.டி.பி,ஐ, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று, வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முகக்கவசம் அணிந்து, கையில் பதாகை ஏந்தி முழக்கமிட்டனர். நிறைவில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.