.

Pages

Thursday, June 25, 2020

விதி மீறல்: திருமண மண்டபத்துக்கு 'சீல்' வைப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி அதிக நபர்களுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள பாலாஜி மஹாலில் கடந்த 24.06.2020 அன்று கும்பகோணம் தியாகி ராமசாமி தெருவைச் சேர்ந்த மணமகளுக்கும், கும்பகோணம் பாணாதுறையைச் சேர்ந்த மணமகனுக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து சதீஷ், வெங்கடேசன், வேலு, சுரேந்திரன், சண்முகம், ஸ்ரீதர் ஆகிய ஆறு நபர்கள் வந்தபோது, நீலத்தநல்லூர் சோதனைச்சாவடியில் காவல்துறை மேற்கொண்ட ஆய்வில் ஆறு நபர்களும் உரிய அனுமதியின்றி சென்னையிலிருந்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி வந்த ஆறு நபர்கள் மீது போலீசாரால் சுவாமிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், உரிய அனுமதியின்றி வந்த ஆறு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்களில் ஸ்ரீதர் என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. போலீசார் உத்தரவை மீறி ஆறு நபர்களும் 24.06.2020 அன்று கும்பகோணம் பாலாஜி மஹாலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், திருமண நிகழ்ச்சியில் அரசின் உத்தரவை மீறி அதிகமான நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ஸ்ரீதர் என்பவர் கொரோனா நோய் பரவுவதற்கு  காரணமாக இருந்துள்ளார்.

எனவே, அனுமதியின்றி வந்த ஸ்ரீதர் மற்றும் ஐந்து நபர்கள் மீதும், அதிகளவில் கூட்டம் சேர்த்த மணமகள் வீட்டார், மணமகன் வீட்டார் மற்றும் அனுமதித்த திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீதும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.