கரோனா ஊரடங்கால் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் வாழ்வாதாரம் காத்திட வலியுறுத்தி, அதிராம்பட்டினம் டூரிஸ்ட் வேன், கார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், பதாகை கையில் ஏந்தி போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் எஸ்.சேக்தாவூது தலைமை வகித்தார். இதில், வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பலர் அவரவர் வாகனங்களுக்கு முன்பாக நின்றுகொண்டு, ஊரடங்கு காலத்தில் சாலை வரியை ரத்து செய்யவேண்டும், ஊரடங்கு காலத்தில் வாகன கடன் வட்டியை ரத்து செய்யவேண்டும், ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கவேண்டும், நலவாரியத்தில் இல்லாத அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் வாழ்வாதார இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும், அனைத்து வாகன உரிமையாளர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் பேரிடர் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.