.

Pages

Saturday, June 27, 2020

அதிராம்பட்டினம் தன்னார்வ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், ஜூன் 27
அதிராம்பட்டினம் தன்னார்வல அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளராக ஏ. அப்துல் மாலிக், தலைவராக ஏ.ஹசன், செயலாளராக டி.பைசல் ரஹ்மான், துணைச் செயலாளராக எஸ்.சமீர் அலி
பொருளாளராக ஏ. முனவ்வர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர வாட்ஸ்அப் குழு ஒன்றை ஏற்படுத்தி, இவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க 10 பேர் கொண்ட பொறுப்பாளர்கள நியமிக்கப்பட்டனர்.

இவ்வமைப்பினர் பயனர்களுக்கு இரத்ததானம் ஏற்பாடு செய்து கொடுத்தல், வரியவர்களுக்கு உதவுதல், நாடோடிகளுக்கு உணவளித்தல், மருத்துவ உதவி, கரோனா உள்ளிட்ட பேரிடர்கால களப்பணிகள் என பல்வேறு சமூகப் பணிகளை சாதி, மத, இன பேதமின்றி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இரத்த தானம் மற்றும் அவசர கால உதவி தொடர்புக்கு...
சமீர் பின் அகமது:-9787574715
அசார்:-8667886349
அனஸ் அகமது:-8778096145
ஃபாதில்:-9791910938

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.