.

Pages

Friday, June 19, 2020

விரைவில் திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில்!

அதிராம்பட்டினம் ரயில் நிலையம்
அதிராம்பட்டினம், ஜூன் 18
சென்னை தாம்பரத்திலிருந்து திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், குறித்த நேரத்துக்கு பயணம் செய்ய முடியதில்லை. அத்துடன், வேறு கூடுதல் ரயில்களும் இயக்கப்படாததாலும், பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.

எனவே, ரயிலின் பயண நேரம் குறித்தும், சென்னையிலிருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை- வழியாக போதுமான ரயில் சேவைகள் இல்லாதது குறித்தும் ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன. அத்துடன், மக்களவை உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்த கோரிக்கைகளை ஏற்ற தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்க கருத்துரு அனுப்பியிருந்தது.

இதைத்தொடர்ந்து வாரத்துக்கு மூன்று நாட்களாக இயக்குவதற்கு அனுமதி தந்துள்ளது. இதன்படி, ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கும் மறு மார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து 7.35 மணிக்கும் புறப்படும். அதிவிரைவு ரயிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி,தென்காசி ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கவும் வாரியம் அனுமதி அளித்துள்ளது. சனி, திங்கள்கிழமைகளில் எர்ணாகுளத்தில் 10.15 க்கு புறப்பட்டு காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் வேளாங்கண்ணியில் காலை 4 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்துக்கு விரைவு ரயிலாக இயங்க உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ப. பாஸ்கரன் தெரிவித்ததாவது: 
தாம்பரத்திலிருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், மற்றும் அறந்தாங்கி ஊர்களிலும் இந்த ரயில்களை நிறுத்தம் செய்ய தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். கரோனா நோய்த்தொற்று முடிந்து திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் உள்ள கேட்டுகளுக்கு பணியாளர்கள் முழுமையாக பணியமர்த்தப்பட்ட பிறகும் இந்த ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த செயல்பாட்டுக்கு காரணமான மத்திய அரசு, ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வே அதிகாரிகள், திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், பொது நல அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.