.

Pages

Monday, June 29, 2020

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 29
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மனிதநேய ஜனநாயகக்  கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று திங்கட்கிழமை காலை வழங்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் மர்ஜூக் தலைமையில், நிர்வாகிகள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், அப்துல் சமது, அஷ்ரப், ஜபருல் ஹக், அகமது அஸ்கர், நபில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பயணிகள், வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள் உள்பட பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர்.

ஒரே வாரத்தில் பொதுமக்களுக்கு 2-வது முறையாக கப சூரக் குடிநீர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.