.

Pages

Saturday, June 13, 2020

அதிராம்பட்டினத்தில் 3 இடங்களில் பதாகைகள் ஏந்தி PFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 13
'குற்றவாளிகளாக்கப்படும் அப்பாவிகள்!', 'நீதியின் கேலிக்கூத்தை தோலுரிப்போம்!' என்கிற முழக்கத்தை முன்வைத்து, பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், துண்டு பிரசுரம் விநியோகம் இன்று (13.06.2020) சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி சார்பில், பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம், அதிராம்பட்டினம் பெரிய கடைத்தெரு, பழைய அஞ்சலக சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பகுதி செயலாளர் ரிழா தலைமை வகித்தார். இதில், தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், ஏ.ஜெ ஜியாவுதீன் (நாம் தமிழர் கட்சி), ஹலீம் (தமுமுக), அதிரை சேக் (மஜக), ஏ.எம்.ஒய் அன்சர்கான், அதிரை மைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து முழக்கமிட்டனர்.

முன்னதாக, 'குற்றவாளிகளாக்கப்படும் அப்பாவிகள்!', 'நீதியின் கேலிக்கூத்தை தோலுரிப்போம்!' என்கிற பிரச்சாரத்தை முன்வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.