அதிராம்பட்டினம், ஜூன் 05
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலை குறைப்பு பற்றி ஆட்டிறைச்சி வியாபாரி அஸ்ரப் கூறியது;
செம்மறி இன ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் இந்த மாதத்தில் ஆடுகளை கழிப்பதை வழமையாக கொண்டிருப்பார்கள். கழிக்கவில்லை என்றால், ஆடுகள் சினை படும் போது கலைந்து விடும் அபாயம் நிலவும் என்பதால், ஆடு வளர்ப்போர் ஆடுகளை விற்க அதிகம் ஆர்வம் காட்டுவர். தற்போது, கரோனா ஊரடங்கால் கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆடுகள் மொத்த விற்பனையும் மந்தமாகவே உள்ளன.
மேலும், திருமண விருந்து, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு விருந்து விழாக்கள் நடைபெருவதில்லை. இதனால் ஆட்டிறைச்சி பயன்பாடும் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது ஆடுகளை கழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால், ஆட்டிறைச்சியின் விலை குறைந்துள்ளது என்றார்.
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலை குறைப்பு பற்றி ஆட்டிறைச்சி வியாபாரி அஸ்ரப் கூறியது;
செம்மறி இன ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் இந்த மாதத்தில் ஆடுகளை கழிப்பதை வழமையாக கொண்டிருப்பார்கள். கழிக்கவில்லை என்றால், ஆடுகள் சினை படும் போது கலைந்து விடும் அபாயம் நிலவும் என்பதால், ஆடு வளர்ப்போர் ஆடுகளை விற்க அதிகம் ஆர்வம் காட்டுவர். தற்போது, கரோனா ஊரடங்கால் கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆடுகள் மொத்த விற்பனையும் மந்தமாகவே உள்ளன.
மேலும், திருமண விருந்து, மொய் விருந்து உள்ளிட்ட பல்வேறு விருந்து விழாக்கள் நடைபெருவதில்லை. இதனால் ஆட்டிறைச்சி பயன்பாடும் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது ஆடுகளை கழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால், ஆட்டிறைச்சியின் விலை குறைந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.