.

Pages

Friday, June 19, 2020

E-PASS ஐ தவறாக பயன்படுத்திய நபர் கைது!

அதிரை நியூஸ்: ஜூன் 19
வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கான இ - பாஸை தவறாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது :-
தஞ்சாவூர் கீழஅலங்கம் பகுதியைச் சேர்ந்த நளினி என்பவர் பெயரில் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து தஞ்சாவூருக்கு வருவதற்காக எடுக்கப்பட்ட இ-பாஸில் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் பயணம் செய்ததால், ராஜலட்சுமி மீது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் ஆள்மாறாட்டம், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்புதல், தொற்று தடை விதிகளுக்கு கீழ்படிய மறுத்தல், ஏமாற்றுதல், பொதுப்பணியாளரால் முறையாக பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாதல் ஆகிய காரணங்களுக்காக 419, 420, 188, 269, 271, 272, 134, 135 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே, ஊரடங்கு காலத்தின்போது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றிட வழங்கப்படும் இ-பாஸ்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும், ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீதும், கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீதும், இ-பாஸில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.