.

Pages

Sunday, June 14, 2020

கல்லணை ஜூன் 16 ல் திறப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 14
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து வருகின்ற ஜூன் 16-ம் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதையொட்டி நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் இன்று (14.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சரால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

தண்ணீரை திறக்கும் இயந்திரங்கள், தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றத்தின் அளவுகோல்கள், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தண்ணீர் திறக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை தயார் செய்திடவும், கழிப்பறைகளை சுகாதாரமாக வைத்திடவும், சமூக இடைவெளி கடைபிடித்தலை உறுதி செய்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது, காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தன், பெருமாள், உதவிப் பொறியாளர் சிவக்குமார்  மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.