.

Pages

Monday, June 15, 2020

அதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் இணைய வழிப் போராட்டம்!

அதிராம்பட்டினம், ஜூன் 15
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய இணைய வழிப் போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன் படி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் கிளை சார்பில்,
கிழக்கு கடற்கரைச் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் நடந்த இணையவழிப் போராட்டத்தில் அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது, கிளைத் தலைவர் நவாப்ஷா, செயலாளர் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, 'வெளிநாடுகளில் காத்திருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வரவேண்டும்!, 'தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றிட வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்துகொண்டு முழக்கமிட்டனர்.

அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.