அதிரை நியூஸ்: ஜூன் 18
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் இன்று (18-06-2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
கரோனா வைரஸ் (Covid-19) பாதிப்பு காலத்தில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும் மக்களின் நலன் கருதியும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலக்கட்டத்தில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடனிற்காக மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை 3 மாத காலத்திற்கு ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மக்களின் இடற்பாடுகளை அறிந்து நுண் நிதி நிறுவனங்களில் செலுத்த வேண்டிய மாத கடன் தவணைத் தொகையை 3 மாத காலக்கட்டத்திற்கு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வசூல் செய்வதை தவிர்க்குமாறு நுண் நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நுண் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை வசூல் செய்வதற்காக கடன் பெற்றவர்கள் வீட்டிற்கு சென்று கடனை கட்டச்சொல்லி சிரமப்படுத்தக்கூடாது. ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால் மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விருப்பத்தின் பேரில் கடனை திருப்பி செலுத்துவோர் தங்களுடைய கிளைகளிலேயே பணத்தை செலுத்தலாம். நுண் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாதவர்களிடம் கடுமையான வசூல் செய்யும் முறையை கைவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் இன்று (18-06-2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
கரோனா வைரஸ் (Covid-19) பாதிப்பு காலத்தில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும் மக்களின் நலன் கருதியும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலக்கட்டத்தில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடனிற்காக மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை 3 மாத காலத்திற்கு ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மக்களின் இடற்பாடுகளை அறிந்து நுண் நிதி நிறுவனங்களில் செலுத்த வேண்டிய மாத கடன் தவணைத் தொகையை 3 மாத காலக்கட்டத்திற்கு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வசூல் செய்வதை தவிர்க்குமாறு நுண் நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நுண் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை வசூல் செய்வதற்காக கடன் பெற்றவர்கள் வீட்டிற்கு சென்று கடனை கட்டச்சொல்லி சிரமப்படுத்தக்கூடாது. ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால் மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விருப்பத்தின் பேரில் கடனை திருப்பி செலுத்துவோர் தங்களுடைய கிளைகளிலேயே பணத்தை செலுத்தலாம். நுண் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாதவர்களிடம் கடுமையான வசூல் செய்யும் முறையை கைவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.