பட்டுக்கோட்டை, ஜூன் 28
கரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டவுள்ளது.
இந்த வார்டில் புதிய படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் புதிய படுக்கை வசதிகளை பார்வையிட்டார். மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களுக்கு விரிவாக அறிவுறுத்தியோடு, அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டவுள்ளது.
இந்த வார்டில் புதிய படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் புதிய படுக்கை வசதிகளை பார்வையிட்டார். மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களுக்கு விரிவாக அறிவுறுத்தியோடு, அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.