.

Pages

Sunday, June 21, 2020

உலக யோகா தினம்: பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் சாதனை!

பட்டுக்கோட்டை, ஜூன் 21
உலக யோகா தினத்தை முன்னிட்டு உலகில் மிக குறைந்த  வயதுள்ள 10 வயது யோக குருவும் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 5 ம் வகுப்பு மாணவன் பாலயோகி திருப்புகழ் 7 விதமான யோகாசனங்களை கண்களை  கட்டிக்கொண்டே கர்நாடக இசை பாடங்களை கீ போர்டில் வாசித்து உலக சாதனை நிகழ்த்தி நோபல் உலக ரெகார்ட்ஸ்ல் இடம் பெற்றார்.

கரோனா பாதிப்பிலிருந்து மீளவும், மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்கு சமர்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவனாந்த பாரம்பரிய யோகா நிலையத்தின் குரு அருணகிரி செய்திருந்தார்.

நிகழ்வில், பிரிலியண்ட் பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பாரதிய ஜனதாவின் மாநில ஊடகப் பிரிவு துணைச்செயலாளர் தாமரை வெங்கடேசன், பிரம்மா குமரி சபையின் உமா மகேஸ்வரி ஐஒபி மேலாளர் கெளரி சங்கர், சென்னை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் குணவதி, தஞ்சை மாவட்ட ஆதிபராசக்தி மன்ற செயலர் முத்துவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.