.

Pages

Friday, June 26, 2020

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் ஜூன்.27-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு காரணமான காவல்துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். காவல்நிலைய படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

படுகொலை செய்த காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு துணை போகக்கூடாது. பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சி நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச் செயலாளர் தயார் சுல்தான் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.