நேற்று நெட்ஒர்க் பழுதால் மின்கட்டணம் செலுத்த வந்த மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர். பணம் செலுத்த முடியாமல் வேதனையுடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து மின்கட்டணம் செலுத்த வந்த பஷீர் அஹமது நம்மிடம் கூறியதாவது...
நான் பிலால் நகரிலிருந்து வருகிறேன். அங்கிருந்து வர சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இங்கு வந்தால் கம்ப்யூட்டர் இயங்கவில்லை என்கின்றனர். ரீடிங் எடுக்க வரும் போது கட்டணம் செலுத்தும் தேதியை கட்டண அட்டையில் குறித்துவிடுவதால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டியுள்ளது தவறினால் மின்துண்டிப்பு செய்துவிடுகின்றனர். மின்வாரியத்தினர் பழைய முறையை பின்பற்றினால் என்னைபோல் தொலை தூரத்திலிருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். பணம் கட்ட வருபவர்களிடம் பணத்தை வாங்கிவைத்துக்கொண்டு ரஷீதை உடனே வழங்கிவிட்டால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்.
நெட் ஒர்க் பழுதடைந்தால் மின் கட்டணம் பெறும் காசாளரின் சம்பளம் கட் செய்வார்களா?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நம்நாடு அப்படித்தான்,
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
முன்பு ஒரு நேரத்தில் கையில் எழுதும் போது உள்ள பிரச்சனை இப்போது நெட் ஒர்க் பிரச்னையாக வந்துள்ளது. நல்ல முனேற்றம் நம் மின்சார வாரியம்.
ReplyDelete