.

Pages

Tuesday, December 3, 2013

அதிரை அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை குறித்து N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கு அரசிடமிருந்து வந்த பதில் !

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்ற அதிரை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மரியாதைக்குரிய N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை துறையினருக்கு கோரிக்கையை அனுப்பிவைத்து அதில் விரைவாக நடவடிக்கை எடுக்கக்கேட்டுக்கொண்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கு பதில் கடிதம் வந்துள்ளன.

கடந்த 18-11-2013 அன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் IAS அவர்களை நேரடியாகச் சந்தித்து அதிரை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்களை பணி புரிய வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறியிருக்கிறார். இவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட அலுவலர் அவர்கள் வெகு சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Adirainews & adirai elaigar kagkeras moheden matrum pothumakkalen korekkaiyai atru kural koduththa aiya theru nr. Ragkarajan m.l.a. Pallandukalam vaalka..valkavea.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.