.

Pages

Tuesday, December 3, 2013

நெட்ஒர்க் பழுதால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் அதிரை மக்கள் அவதி !

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியினர் மின் கட்டணம் செலுத்த நகரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து செல்வது வாடிக்கை. தற்போது மின்கட்டணம் செலுத்தும் முறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் அனைத்து பகுதி மக்களும் அலுவலகம் வந்து பணம் செலுத்தி வருகின்றனர்.

நேற்று நெட்ஒர்க் பழுதால் மின்கட்டணம் செலுத்த வந்த மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர். பணம் செலுத்த முடியாமல் வேதனையுடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து மின்கட்டணம் செலுத்த வந்த பஷீர் அஹமது நம்மிடம் கூறியதாவது...
நான் பிலால் நகரிலிருந்து வருகிறேன். அங்கிருந்து வர சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இங்கு வந்தால் கம்ப்யூட்டர் இயங்கவில்லை என்கின்றனர். ரீடிங் எடுக்க வரும் போது கட்டணம் செலுத்தும் தேதியை கட்டண அட்டையில் குறித்துவிடுவதால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டியுள்ளது தவறினால் மின்துண்டிப்பு செய்துவிடுகின்றனர். மின்வாரியத்தினர் பழைய முறையை பின்பற்றினால் என்னைபோல் தொலை தூரத்திலிருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். பணம் கட்ட வருபவர்களிடம் பணத்தை வாங்கிவைத்துக்கொண்டு ரஷீதை உடனே வழங்கிவிட்டால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்.



3 comments:

  1. நெட் ஒர்க் பழுதடைந்தால் மின் கட்டணம் பெறும் காசாளரின் சம்பளம் கட் செய்வார்களா?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    நம்நாடு அப்படித்தான்,

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. முன்பு ஒரு நேரத்தில் கையில் எழுதும் போது உள்ள பிரச்சனை இப்போது நெட் ஒர்க் பிரச்னையாக வந்துள்ளது. நல்ல முனேற்றம் நம் மின்சார வாரியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.