.

Pages

Tuesday, December 3, 2013

முத்துப்பேட்டையில் அதிமுக பிரமுகரின் வாகனம் தீ வைத்து எரிப்பு ! [ புகைப்படங்கள் ]

முத்துப்பேட்டை திமிலத்தெரு தேனா சீனா காலனியில் வசிப்பவர் அயூப்கான்(42). இவர் 7-வது வார்டு அம்மா பேரவை செயலாளராக உள்ளார். இவரது தந்தை சுல்தான் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபாண்மை பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் அயூப்கான் நேற்று முன்தின இரவு முத்துப்பேட்டை கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு தனது டூவீலரை வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். அப்பொழுது அவரது பைக் அருகில் சைக்கிள் ஒன்றும் இருந்தது. இந்த நிலையில் அதிகாலை 2 மணி அளவில் வீட்டு அருகில் நாய்கள் சத்தம் கேட்டுள்ளது.

அப்பொழுது காலனி வீட்டு காம்பவுண்ட் சுவரிலிருந்து ஏறி குதிக்கும் சத்தம் கேட்டதை அறிந்த அயூப்கான் வெளியில் வந்து பார்த்தபோது தனது டூவீலரும் சைக்கிளும் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் அவரும் அக்கம்பக்கத்தினரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர் முடியவில்லை. அதனால் டூவீலரும் சைக்கிளும் முழுவதும் எரிந்து சாம்பலாகியது. மேலும் வீடு வெளிப்புற கட்டிடமும் காலனி வீடுகளுக்கு இணைப்பு உள்ள மின்சார மீட்டர்களும் எரிந்து நாசமானது.

இது குறித்து அ.தி.மு.க. பிரமுகர் அயூப்கான் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்அபெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். இதுகுறித்து அதிமுக நிர்வாகி அயூப்கான் கூறுகையில் எனக்கு தொடர்ந்து பல்வேறு வகையில் மிரட்டலும் அச்சுறுத்தலும் வருகிறது. இந்த நிலையில் எனது வாகனத்தை யாரோ மர்ம நபர் தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
                        
- இரா.பகத்சிங்
நன்றி : நக்கீரன்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.