.

Pages

Thursday, January 30, 2014

என்னமோ நடக்குதுங்க! என்னான்டு கேட்டா அடிக்க வருதுங்க!!


மதூர் ஒரு பாரம்பரியமிக்க ஊர் என்றால் அது மிகையாகாதுங்க, வந்தவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊர் நமது அதிரைங்க, இங்கு எல்லா மக்களும் அண்ணன் தம்பிகளாக சகோரத்துவம் ஓங்கி இருக்கின்ற ஊருங்க.

மார்க்க வல்லுனர்கள், கவிஞர்கள், படித்தவர்கள், அறிவுடையோர், நல்ல சிந்தனையுடையோர், செல்வமுடையோர், பொதுநல போக்குடையோர், சமூக ஆர்வலர்கள், எந்த பிரதி பலனும் எதிர்ப்பார்க்காமல் சமூக சேவை செய்பவர்கள், ஆசிரியப் பெருமக்கள், கல்விக்கூடங்கள், மருத்துவ மனைகள், திருமண கூடங்கள், இன்னும் எத்தனையோ அம்சம்சங்களை பெற்ற ஊருங்க.

பொழுது போகவில்லை என்று அலையத் தேவை இல்லைங்க, மற்ற ஊருகளைப் போல் இல்லாமல் இந்த அதிரை அந்த அளவுக்கு உன்னதமான சுகந்தமான ஒரு அம்சமான ஊருங்க.

ட்டுமான பணிகளை எடுத்துகொண்டால் அதுவும் அதிகம்க, கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களின் விலைகளும் அதிகம்க, கட்டுமான கூலியைப் பார்த்தால் அது மிக மிக அதிகம்க, வேலை செய்கின்றவருக்கு ஒரு கூலிங்க, அவரை கூட்டி வருகிறவருக்கு வேறு ஒரு கூலிங்க, செய்கின்ற வேலைகளெல்லாம் அவ்வளவு தரம் என்று சொல்ல முடியாதுங்க, முன்பெல்லாம் டீ வடை எல்லாம் அவங்கலோடங்க, இப்போ நம்மலோடங்க, இனிவரும் காலங்களில் டீக்கு பதில் நாட்டு முட்டைதானுங்க, வடைக்கு பதில் ஹல்வாங்க.

டைத்தெருவுகளில் உணவுக்காக கடல் சார்ந்த உணவோ, பறவை இன உணவோ, கால்நடை உணவோ, மரம் செடி கொடிகளில் காய்க்கின்ற உணவோ, நீரை சூடேற்றி பருகுகின்ற பானமோ எல்லாமே அதிகம்க, விலைகளும் வானத் தொடும் அளவுங்க.

ரையூர்தெருவில் உள்ள மீன் மார்கெட்டுக்கு நம் பெண்கள் கூட்டு கூட்டாக சேர்ந்து ஆட்டோ பிடித்து போய் மீன் மற்றும் காய்கறி வாங்கி வருகிறாங்கங்க. ஒரு ஆட்டோ சவாரிக்கு அங்கு போய்திரும்பி வர கட்டணம் 100ரூபாய். ஒரு நாளைக்கு சராசரியாக முப்பது-நாற்பது ஆட்டோ சவாரி. கட்டணத்தை கணக்கு பாருங்க. 3000-4000ரூபாய்தானுங்க. நம் ஊருக்கு மத்தியில் பெண்களுக்கென்று ஒரு மார்கெட் திறந்து இருந்தால் எவ்வளவு மிச்சம். பணம் ஒரு பக்கம் மிச்சமாக இருந்தாலும் அவதி, வேதனை, இல்லாமல் இருக்குமுங்க, நேரமும் மிச்சமுங்க.

ங்கு வீட்டு மனைகளெல்லாம் தீப்பெட்டி அளவுதானுங்க, விலையை கேட்டா அது ஒரு கன்டைனர் அளவுங்க இது ரொம்பவே அதிகம்க, மீன்களும் ஒன்னும் சரி இல்லைங்க, விலையைக் கேட்ட அதுவும் அதைவிட அதிகம்க, இருந்தாலும் விற்றுப் போய்டுதுங்க, அது என்ன தங்கமான்னு கேட்ட பல்லை இறுக்கிக்கொண்டு ஒரு முறை முறைக்குதுங்க.    

ண்களும் சரி, பெண்களும் சரி காசுகளை சிலவு செய்வதில் இளம்வயது ஆண்களும் பெண்களும் மிக மிக அதிகம்க, சிலவு செய்வதில் சரிக்கு சரி சமம்ங்க, சிக்கனம் என்பது மிக மிக குறைவுங்க, இதற்கெல்லாம் காரணம் யாரென்று பார்த்தால் கண்டு கொள்ளாத ஒரு சில தகப்பன்மார்களும் கணவர்மார்களுமுங்க.

வாகன போக்குரத்தும் மிக மிக அதிகம்க, அதன் கட்டணங்களும் போகின்ற வேகங்களும் அதைவிட அதிகம்க.

ரண்டு சக்கர வாகனம் கடனுக்கு கிடைக்குது என்று அதை வாங்கி கண்ணா பின்னா என்று ஓட்டி பல விபத்துக்கு ஆளாகி மிகுந்த துயரம். அவசியம் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியே ஆகணும் அதில் தவறேதும் இல்லைங்க, இருந்தாலும் இவ்வளவு கவனக்குரைவோடு இந்த வேகம் தேவையா? வாகனம் ஓட்ட வயது வரம்பு என்று ஏதும் இல்லையா? என்னங்க இது?

ந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு நமதூரில் விளம்பர வண்டிகள், பழ வண்டிகள், தெருவுக்கு தெரு அதிகம்க, அதன் ஒலி எழுப்புதலும் காது குருத்தெல்லாம் தெறிக்கின்ற அளவுக்கு இருக்குதுங்க, வாங்கித் தின்ன ஆள் இருக்குதுங்க, என்னான்டு கேட்க ஆள் இல்லைங்க.  

மதூர் பெற வேண்டிய அனேக அரசு சார்ந்த சலுகைகள் தடைபட்டு கிடக்குதுங்க, அதெல்லாம் கிடைக்குமா? அல்லது கிடைக்காமல் போய்விடுமா? நீள அகல உயர  இரயில் பாதை அமைத்து இரயில் வண்டிகள் எப்போது ஓடப்போகுதுங்க? இன்னும் எவ்வளவோ காரியங்கள் நடக்கப்போகுது என்று சொல்றாங்க, ஆனால் நடக்களைங்க.

தார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டர் ஐடி, ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வீட்டு வரி, வாட்டர் பில், எலெக்ட்ரிக் பில், டெலிபோன் பில், மொபைல் போன் பில், வங்கி பாஸ்புக், இன்ஸ்யூரன்ஸ், வீட்டு பத்திரம், வீட்டு பட்டா, பிறந்த சான்றிதழ், படித்த சான்றிதழ், கேபிள் இணைப்பு பில், ஒரே கடையில் வாடிக்கையாக வாங்கும் மளிகை சாமான்கள் பில், காய்கறி பில், இறைச்சி மீன் இறால் பில், மருத்துவ பில், இவை எல்லாம் பக்காவாக ஒரே பெயரில் இருக்குதுங்க, இருந்தாலும் நம்புவதற்கு அரசு அதிகாரிகள் யோசிக்கின்றாங்கங்க. இந்தப் பிரச்னையை போக்க எல்லாத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அட்டையாக கொடுத்தால் எவ்வளவு வசதிங்க. யாருங்க யோசிப்பது? சொல்லுங்க.

மதூரில் உள்ள அனைத்து வங்கிகளும் நல்லபடியாக சம்பாதிக்குதுங்க, ஆனால் இன்றுவரை எந்த வங்கியாவது ஒரு மரத்தையாவது நட்டுருக்குதாங்க?

ங்கு நடக்கின்ற சங்கதிகளை இப்படி ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு பார்த்தால் எல்லாமே அதிகம். இருந்தாலும், எதுவும் தடை இல்லாமல் நிறைவேறிவிடுகின்றதுங்க.

மதூரில் எல்லாமே அதிகம்க ஆனால் ஒற்றுமை இல்லைங்க. ஒற்றுமை இல்லாததினால் விழிப்புணர்வு அறவே இல்லைங்க.

ன்னங்க இது? நாமெல்லாம் எப்போதுங்க ஒற்றுமையாக விழிப்புணர்வோட செயல்படப் போறோம்முங்க? விருந்து சோறுன்ன ஒற்றுமையை பாருங்க, உலகமே அசந்துவிடுமும்க.

ன்ஷா அல்லாஹ், என்று நாம் எல்லோரும் சொல்றோமுங்க, சொல்லிப்புட்டு முயற்சி இல்லைங்க.

நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முடியாதது ஏதும் உண்டோ? எல்லாவற்றையையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவரணும் என்றால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமையோடு செயல்பட இருக்கின்ற பெலன் போதாதா? இருக்கின்ற பெலத்தோடு செயல்படுவோம்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். அதுபோல் குடும்பம் செழிக்க குடும்ப ஒற்றுமை வேண்டும், குடும்ப ஒற்றுமை வேண்டும் என்றால் இளையவர்கள் பெரியவர்களுக்கு கீழ்படிந்து மதித்து நடக்க வேண்டும்.

பெரியவர்கள் இளையவர்களுக்கு அறிவுரை ஆலோசனை சொல்வது நல்லதுக்குதானே அன்றி தீயதுக்கு அல்ல.

ன்னமோ நடக்குதுங்க, நமக்கு ஒண்ணுமே புரியலைங்க, என்னான்டு கேட்டா அடிக்க வருதுங்க, 20-25வருடங்களுக்கு முன்னாடி இப்படி இல்லைங்க, எல்லாமே இப்பதானுங்க.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.


16 comments:

  1. அருமையான சொற்றொடர்களை கொண்டு எதுகை மோனை பாணியில் அருமையான அர்த்தமுள்ள வரிகள்,வாழ்த்துக்கள் உங்களது வரிகளின் உண்மைகளை சொன்னதற்கு!!!

    ReplyDelete
  2. Nega ivlo soldringa nanga muyarchi seironga

    ReplyDelete
  3. கடற்கரை தெருவில் பெண்களுக்கென தனி மார்கெட் உண்டு, மற்ற தெரு பெண்கள் பயன்படுத்தலாமே! தெருவுக்கு தெரு மன்றம், சங்கங்கள், அமைப்பு உண்டு இவர்கள் நீங்க சொன்ன குறைகளை கட்டு படுத்தலாமே! - சிந்திப்பார்களா!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      கரையூர்தெருவை விட கடற்கரைதெரு தூரம்,

      Delete
  4. நீங்க என்னத்தைதான் எழுதுனாலும் படிக்க ருசியாக படிப்பாங்க. எதையும் யோசிக்க மாட்டாங்க. கூலி உயர்வு உயர்ந்துக்கிட்டேதான் போகும்க. வீடு கட்டுவோர் சங்கம்னு இங்கே ஆரம்பிக்க மாட்டாங்க. மேஸ்திரிகள்(எல்லா வகை மேஸ்திரியும்தான்) சொன்னதை அப்படியே கேட்டு கேட்க்கும் பணத்தைக் கொடுப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      எழுதி உணர்த்துவது கடமை, திருந்துவது மக்கள் கடமை. திருந்தவில்லையே என்று எழுதுவதை நிறுத்தக் கூடாது.

      தீ பற்ற வில்லையே என்று கொழுத்துவதை நிறுத்தக் கூடாது, கொழுத்திக் கொண்டே இருக்க வேண்டும், ஒரு கட்டத்தில் தீ குப் என்று பற்றிக் கொள்ளும்.

      Delete
  5. ஜமால் காக்கா அவர்களே ஒரு மிகப்பெரிய இந்திய திருநாட்டின் செயல்பாடுகளை நமது அதிரைக்கு ஒப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இன்னும் நிறைய இருக்கு.

      Delete
  6. அன்பு நண்பர் ஜமால் முஹம்மது அருமையாக மனதில் பதிவும்படி அசத்தி விட்டீர்கள். அர்த்தமுள்ள வரிகள்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இதுக்கு மேலே என்ன செய்வது?

      Delete
  7. அப்பாவித்தனமான தலைப்பிட்டு ஆழ்ந்த கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி உண்மையை வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள்.அருமை.அருமை. இதற்க்கு மேல் சுட்டிக் காட்டுவதற்கு என்ன இருக்கு.???

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இனிமேல் என்ன செய்யணும் தெரியுமா? ஒவ்வொருத்தரையா கூட்டிக்கிட்டு வந்து பாருங்கையா என்று காண்பிக்கணும்.

      Delete
  8. அன்பு நண்பர் ஜமால் முஹம்மது அருமையாக மனதில் பதிவும்படி அசத்தி விட்டீர்கள். அர்த்தமுள்ள வரிகள்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள், எழுத்துக்குமேல் எழுத்து எழுதினால் என்ன நடக்குமோ தெரியலே.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.