.

Pages

Thursday, January 2, 2014

த.மு.மு.க வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அழைப்பு !

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 03-01-2014 மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதில் தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி மற்றும் மாநில அமைப்புச்செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதன் செயலாளர் அஹமது ஹாஜா அழைக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.