அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என நிர்வாகிகளின் முடிவை அடுத்து இதுகுறித்து விவாதிப்பதற்காக நமதூர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் இல்லத்தில் நேற்று இரவு சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பைத்துல்மால் அபுதாபி கிளையின் நிர்வாகி அபுல் கலாம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் எதிர்வரும் மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று தினங்களில் 14 வது திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் சிறப்பாக நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள். வந்திருந்த அனைவரையும் அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அன்புடன் வரவேற்றார்.
பைத்துல்மால் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...........
ReplyDeleteமான் ஷேக்
நல்ல தகவல் இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஆனால் .........ஏப்ரல் 31???????? இந்த வருடம் இருக்கா :) ?????
நல்ல தகவல் இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஆனால் .........ஏப்ரல் 31???????? இந்த வருடம் இருக்கா :) ?????
சகோ. சைஃப்தீன்
ReplyDelete// ஏப்ரல் 31???????? இந்த வருடம் இருக்கா :) ????? //
தவறாக பதியப்பட்ட தேதியை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி !
14 வது திருக்குர்ஆன் மாநாடு எதிர்வரும் மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற இருக்கிறது.
பதிவிலும் திருத்தப்பட்டுள்ளது.