.

Pages

Wednesday, April 2, 2014

அதிரை பைத்துல்மால் சார்பில் அதிரையில் திருக்குர்ஆன் மாநாட்டை நடத்த முடிவு !

அதிரை பைத்துல்மால் - அதிரை வாழ் ஏழை எளியோருக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் செயல்பட்டு வரும் ஒரு இஸ்லாமிய நிதி நிறுவன அமைப்பு. இங்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என நிர்வாகிகளின் முடிவை அடுத்து இதுகுறித்து விவாதிப்பதற்காக நமதூர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் இல்லத்தில் நேற்று இரவு சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பைத்துல்மால் அபுதாபி கிளையின் நிர்வாகி அபுல் கலாம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் எதிர்வரும்  மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று தினங்களில் 14 வது திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் சிறப்பாக நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள். வந்திருந்த அனைவரையும் அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அன்புடன் வரவேற்றார்.


4 comments:

  1. பைத்துல்மால் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...........


    மான் ஷேக்

    ReplyDelete
  2. நல்ல தகவல் இன்ஷா அல்லாஹ்
    ஆனால் .........ஏப்ரல் 31???????? இந்த வருடம் இருக்கா :) ?????

    ReplyDelete
  3. நல்ல தகவல் இன்ஷா அல்லாஹ்
    ஆனால் .........ஏப்ரல் 31???????? இந்த வருடம் இருக்கா :) ?????

    ReplyDelete
  4. சகோ. சைஃப்தீன்

    // ஏப்ரல் 31???????? இந்த வருடம் இருக்கா :) ????? //

    தவறாக பதியப்பட்ட தேதியை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி !

    14 வது திருக்குர்ஆன் மாநாடு எதிர்வரும் மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற இருக்கிறது.

    பதிவிலும் திருத்தப்பட்டுள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.