முதலில் ஆதம் நகர் ஜமாத் துணைதலைவர் வாப்பு மரைக்காயர் மற்றும் வார்டு கவுன்சிலர் நூர்ஜஹான் ஆகியோரை சந்தித்தார். அதைதொடர்ந்து பிலால் நகர் கிளை நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தெருமுனை பிரசாரத்தில் அப்பகுதியினரிடேயே சிறிது நேரம் உரை நிகழ்த்தினார். அப்போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினர் திரளாக கலந்துகொண்டார்கள்.
இதையடுத்து எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு சென்று அதன் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் ஆகிய ஊர்களின் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டிஆர் பாலு, இவற்றில் சிலவற்றை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பிரசாரத்தின் போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினர் வேட்பாளரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.
நமதூரில் அரசு கலை கல்லூரி அமைத்து தருமாறு கேட்டிருக்கலாம். நமதூரில் ஏற்கனவே ஒரு கல்லூரி இருப்பதால் நமதுருக்கு மூவாயிரம் மாணவ மாணவியர் வந்து செல்கின்றனர். இன்னொரு அரசு கலை கல்லூரி வரும் பட்சத்தில் கூடுதலாக மூவாயிரம் மாணவ மாணவியர் வந்து செல்வார்கள் இதனால் நமதூரில் தொழில் செய்யும் நபர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நமதூரில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன் வருவார்கள். கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ மாணவியர்க்கு எண்ணிக்கை அதிகரிக்கும் போது தமிழக அரசு பேருந்துகளை அதிகபடுத்தி தர முன் வரும். ஆகையால் அரசு கலை கல்லூரியே நமதூரில் தொடங்கினால் நல்ல இருக்கும். நமதூர் பெண் பிள்ளைகளை மனதில் வைத்து அரசு கலை கல்லூரியே நமதுருக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள். நமதூர் முன்னேற்றதிற்கு பாடுபடுங்கள். அல்லாஹுடைய உதவி நமக்கு எப்போது நமக்கு கிடைக்கும்.
ReplyDeleteமே மாசம் 16 தேதி வரைக்கும் தொகுதியை நல்லா வளம் வருவார் பிறகு அவரை பார்க்க டெல்லிக்கு தான் போக முடிவுமா?பாரு மக்களே பாருங்க. ஸ்ரீபெரும்பதூர் தொகுதி மக்கள் கொடுத்த கோரிக்கை நிறைவேற்றி இருந்தால் அங்கே போட்டிட்டு இருப்பார், மக்கள் உனக்கு வோட்டு போடறாங்களா வேட்டு வைக்கிராங்கலானு கூடிய சீக்கிரம் தெரியும்.
ReplyDelete