.

Pages

Wednesday, April 2, 2014

பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்த டி.ஆர் பாலு எஸ்டிபிஐ கட்சியினரோடு சந்திப்பு !

இன்று இரவு 8 மணியளவில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியாகிய ஏரிபுறக்கரை கிராம எல்லைக்குட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளுக்கு தஞ்சை தொகுதியின் திமுக வேட்பாளர் டிஆர் பாலு வாக்கு சேகரிக்க வருகை தந்தார்.

முதலில் ஆதம் நகர் ஜமாத் துணைதலைவர் வாப்பு மரைக்காயர் மற்றும் வார்டு கவுன்சிலர் நூர்ஜஹான் ஆகியோரை சந்தித்தார். அதைதொடர்ந்து பிலால் நகர் கிளை நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தெருமுனை பிரசாரத்தில் அப்பகுதியினரிடேயே சிறிது நேரம் உரை நிகழ்த்தினார். அப்போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினர் திரளாக கலந்துகொண்டார்கள்.

இதையடுத்து எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு சென்று அதன் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் ஆகிய ஊர்களின் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டிஆர் பாலு, இவற்றில் சிலவற்றை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தின் போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினர் வேட்பாளரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.


எஸ்டிபிஐ கட்சியினர் டிஆர் பாலுவிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் விவரம்

2 comments:

  1. நமதூரில் அரசு கலை கல்லூரி அமைத்து தருமாறு கேட்டிருக்கலாம். நமதூரில் ஏற்கனவே ஒரு கல்லூரி இருப்பதால் நமதுருக்கு மூவாயிரம் மாணவ மாணவியர் வந்து செல்கின்றனர். இன்னொரு அரசு கலை கல்லூரி வரும் பட்சத்தில் கூடுதலாக மூவாயிரம் மாணவ மாணவியர் வந்து செல்வார்கள் இதனால் நமதூரில் தொழில் செய்யும் நபர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நமதூரில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன் வருவார்கள். கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ மாணவியர்க்கு எண்ணிக்கை அதிகரிக்கும் போது தமிழக அரசு பேருந்துகளை அதிகபடுத்தி தர முன் வரும். ஆகையால் அரசு கலை கல்லூரியே நமதூரில் தொடங்கினால் நல்ல இருக்கும். நமதூர் பெண் பிள்ளைகளை மனதில் வைத்து அரசு கலை கல்லூரியே நமதுருக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள். நமதூர் முன்னேற்றதிற்கு பாடுபடுங்கள். அல்லாஹுடைய உதவி நமக்கு எப்போது நமக்கு கிடைக்கும்.

    ReplyDelete
  2. மே மாசம் 16 தேதி வரைக்கும் தொகுதியை நல்லா வளம் வருவார் பிறகு அவரை பார்க்க டெல்லிக்கு தான் போக முடிவுமா?பாரு மக்களே பாருங்க. ஸ்ரீபெரும்பதூர் தொகுதி மக்கள் கொடுத்த கோரிக்கை நிறைவேற்றி இருந்தால் அங்கே போட்டிட்டு இருப்பார், மக்கள் உனக்கு வோட்டு போடறாங்களா வேட்டு வைக்கிராங்கலானு கூடிய சீக்கிரம் தெரியும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.