.

Pages

Thursday, April 3, 2014

மழைத்தொழுகைக்கு திரண்டு வந்த அதிரையர்கள் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஜமாத்துல் உலமா சபை சார்பில் வறண்டு காணப்படும் நமதூருக்கு மழை வேண்டி இன்று [ 03-04-2014 ] காலை 8 மணியளவில் நமதூர் பெரிய ஜும்மா பள்ளியில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகை நடைபெறுவதற்கு முன்னதாக ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் மழை தொழுகை குறித்த சிறப்பு சொற்பொழிவாற்றினார். அதனைத்தொடர்ந்து மழை தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் பிரார்த்தனை செய்யப்பட்டது. சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த பிரார்த்தனையில் தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்கள். நிகழ்வின் இறுதியில் லெ.மு.செ. அப்துல் காதர் ஆலிம் அவர்களின் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

முன்னதாக அதிரை ஜமாத்துல் உலமா சபை மூலம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகோள் விடப்பட்டதை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டதால் அதிரை அனைத்து மஹல்லாவை சேர்ந்தவர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சிறப்பு நிகழ்வில் அதிரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும்திரளானோர் கலந்துகொண்டார்கள். தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை பள்ளியை சுற்றி அமைந்துள்ள சாலைகளில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதி முழுவதும் நெருக்கடியாக காணப்பட்டது.





13 comments:

  1. ALLAH AKBAR... ANAIVARIN THOLUHAIUM ALLAH KABUL SEIVANAHA MALAIKAHA KEYTTA DUA VAIUM ALLAH KABUL SEIDHU NAM OOORUKU MALAIYAI POLIYA VAIPANAHA AAMEEN .....

    ReplyDelete
  2. அல்லாஹ் அக்பர்... யா அல்லாஹ் எங்கள் அனைவரின் துவாக்களையும் காபுல் செய்து உன் ரஹ்மதான மலையை பொழிய செய்வாயாக ஆமின் ஆமின்..............

    ReplyDelete
  3. அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
    யா அல்லாஹ் எங்கள் மீது கருணை காட்டி மழை பொழிய கருணை காட்டு எங்கள் ரஹ்மானே

    ReplyDelete
  4. யா அல்லாஹ்!!! எங்களுடைய பாவங்களை மன்னித்து உன்னுடைய மழை என்ற பேரருளை பொழிந்து எங்களையும்,கால்நடைகளையும்,அனைத்து உயிரினங்களையும் வாழ வைப்பாயாக, ஆமீன்!!!

    ReplyDelete
  5. நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னித்து மழையென்னும் அருட்கொடையை பொழிய வைப்பானாகவும். ஆமீன்.

    இந்த மழைக்காக வேண்டி அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்விடத்தில் ''துவா'' கேட்போமாக.!.

    ReplyDelete
  6. மரங்கள், விளை நிலங்களை அழித்து பிளாட் போட்டதன் விளைவு தான் மழை இல்லை, இதை தடுக்க தவறிய நாம் ஒன்று கூடி பிராத்திக்கிறோம் - இனியாவது அரசு பிளாட் போடுபவர்களை கண்காணிக்க வேண்டும். எல்லோருடைய துவா இறைவன் கபுல் செய்வானாக - ஆமின்.

    ReplyDelete
  7. உயிரை தந்தவனே உயித்துளியை தந்து எங்களை காப்பாயாக

    ReplyDelete
  8. நபிவழியில் திடலில் தொழுகை வைத்திருக்க வேண்டும்

    ReplyDelete
  9. யா அல்லாஹ்!!! எங்களுடைய பாவங்களை மன்னித்து உன்னுடைய மழை என்ற பேரருளை பொழிந்து எங்களையும்,கால்நடைகளையும்,அனைத்து உயிரினங்களையும் வாழ வைப்பாயாக, ஆமீன்

    ReplyDelete
  10. நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னித்து மழையென்னும் அருட்கொடையை பொழிய வைப்பானாகவும். ஆமீன்.

    இந்த மழைக்காக வேண்டி அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்விடத்தில் ''துவா'' கேட்போமாக.!.

    ReplyDelete
  11. யா அல்லாஹ் இதே போல் அனைத்து விஷயங்களிலும் ஊர் மக்கள் ஒற்றுமையாக இருக்கவும் அருள்பாளிப்பாயாக ஆமீன்

    ReplyDelete
  12. குறிப்பு:- இந்த பின்னூட்டத்தை அகற்றவோ, ஏலனமாகவோ நினைத்து விடவேண்டாம்.

    நமதூரில் மழைக்காக மக்கள் பலதரப்பட்ட கூட்டம் கூட்டமாக தொடர்ந்து தொழுது வருகின்றனர். நல்லதே செய்கின்றனர், அந்த நல்ல செயலை எப்படி செய்கின்றனர் என்றால் முழு விசுவாசத்தோடு செய்ய வில்லை.

    இவ்வளவு பேர் கூடுகின்றனர், தொழுகின்றனர், ஆனால் மழை வரவில்லை, காரணம் யாருக்குமே மழை வரும் என்று ஒரு துளி விசுவாசம்கூட இல்லை.

    மழையைவேண்டி தொழுகப்போகும் நாம் நிச்சயம் அல்லாஹ் மழையை இறக்குவான் என்று மனதில் அசைக்கமுடியாத ஈமானை கொண்டு கையில் குடையையும் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

    அல்லாஹ் அதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

    ReplyDelete


  13. மழைக்காக வேண்டி அல்லாஹ்விடம் துவா கேட்பது ஒரு புறம் இருக்க களத்தில் செய்யவேண்டிய வேறு ஒரு முயர்ச்சியும் நம்மிடம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கின்றது. நமதூரில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அனைவரையும் வாட்டி எடுக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்ததோர் விசயம். இதற்க்கான முக்கிய காரணம் எது என்பதை நாம் மனதில் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றோம். நமதூர் எல்லையில் தண்ணீர் சுத்தகரிப்பு செய்து ஒரு நாளில் பல லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள்.இதுவே நமதூர் தண்ணீர் பஞ்சத்துக்கு முக்கிய காரணம்.இவர்களை அங்கு இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.லஞ்சம் லட்சங்களை எதிர்பார்க்காமல் ஊர் மக்களுக்காக,மக்களின் நலனுக்காக இவர்களை அப்புறபடுத்த வேண்டும்.

    நெய்னா முஹம்மத் @ ரியாத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.