.

Pages

Friday, April 4, 2014

அதிரையர் வாக்குகள் யாருக்கு ? மக்கள் கூறும் கருத்துகள் - முதல் கட்ட ரிப்போர்ட் ! [ காணொளி ]

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இதுவரையில் கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளார்களில் அதிமுக சார்பில் திரு. கு. பரசுராமனும், திமுக சார்பில் திரு. டிஆர் பாலுவும், காங்கிரஸ் சார்பில் திரு. கிருஷணசாமி வாண்டையாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ். தமிழ்செல்வியும், பிஜேபி சார்பில் கருப்பு (எ) முருகானந்தமும், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் திரு. பழனிராஜனும் களத்தில் உள்ளனர்.

இவர்களிடேயே போட்டிகள் சற்று கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவது ஒருபக்கம் இருந்தாலும். நமதூர் அதிரையில் வாழும் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக அதிரை நியூஸின் ஆஸ்தான நேர்காணல் ஸ்பெசலிஸ்ட் சாகுல் ஹமீது தலைமையில் அதிரை நியூஸ் குழுவினர் ஒவ்வொரு பகுதிகளாக சென்று கருத்துகளை பெற்று வருகிறார்கள். பல கட்டமாக நடக்க இருக்கும் 'அதிரையர் வாக்குகள் யாருக்கு ? ' என்ற கருத்து கேட்பில், முதல்கட்டமாக செக்கடி மேடு, கடைத்தெரு, தரகர் தெரு, கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் புழங்கும் மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதோ அதிரையர் கூறும் கருத்துகள்...

11 comments:

  1. வாக்களிக்கும் உரிமை ஒவ்வொரு இந்தியனின் கடமை அதைவிட உரிமையும் கூட. அனால் கருத்துக்கணிப்பு என்பது தனிப்பட்டவரின் உரிமையில் தலையிடுவதுபோல் உள்ளது. காரணம் ஒருவர் வாக்களிக்கும்பொழுது மறைவிடத்திலிருந்து கொண்டு தனது வாக்கை செலுத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள், ஆனால் கருத்துக்கணிப்பின் விடியோவை வெளிட்டது வாக்களிக்கும் உரிமைக்கு எதிர்மறையாக உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?.

    ReplyDelete
  2. சிறந்த கருத்துகளை மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. அதிரை நியுசின் கருத்து கணிப்பில் அதிரை மக்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளார்கள் மத்தியில் காங்கரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் எனபது அனைவரின் விருப்பமாக உள்ளது . மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ள அதிரை மக்கள் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கும் காங்கரஸ் வேட்பாளர் வாண்டையார் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்தால்
    மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வழி பிறக்கும் டி ஆர் பாலு வெற்றி பெற்று அவர் சார்ந்திருக்கும் தி மு க தலைமை என்ன முடிவெடுக்கும் என்று யாருக்கு தெரியும் முன்பு ஒரு முறை பி ஜே பி ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சி தான் தி மு க அதன் தலைவர் கருணாநிதி அருமை நண்பர் அனஸ் போன்றவர்கள் சிந்தித்து வாக்களித்தால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய பேருதவியாக இருக்கும் டி ஆர் பாலு ரயில்வே நிலை குழு தலைவராக 5 ஆண்டுகள் இருந்தபோது அவர் நினைத்து இருந்தால் எப்போதோ நிறைவேறி இருக்கும் திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை நம்மூர் வழியாக ரயில் ஓடி கொண்டிருக்கும் அவருடைய முயற்சியில் ரயில் பாதையே இல்லாத மன்னார்குடிக்கு ரயில் பாதை விட்டார் இன்னும் சொல்ல போனால் திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டதே அவர் தான் இதை நான் சொல்லவில்லை சென்ற வருடம் ஜூனியர் விகடனிலும் நகீரனலிம் அவர் கட்சி சார்ந்த பழனி மாணிக்கமே தெரிவித்து இருந்தார் அவருடைய திட்டமே மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ரயில் பாதை அமைத்து பட்டுக்கோட்டை வரை நிறுத்த வேண்டும் எப்படி அதிராம்பட்டினம் ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதியாக இருந்து அது மாறி போனதோ அதே போல் அதிரம்பாட்டினம் ரயில் நிலையமும் இல்லாமல் அதிரை மக்கள் பட்டுக்கோட்டை ரயில் ஏறி போகும் நிலை உருவாகும் இது தான் அவரது எண்ணம் கருத்து கணிப்பில் ஒரு உண்மை தெரிகிறது வருங்கால இளைங்கர் பட்டாளம் மிக தெளிவாக இருக்கிறது அதிரை மக்களின் குறிப்பாக இஸ்லாமியர்களின் 50 க்கு மேற்பட்டவர்களின் மூளை சலவை செய்து தி மு க வைத்துள்ளது .அதற்க்கு ஆட்படாமால் எங்கள் ஒட்டு காங்கிரசுக்கே என்று இளைங்கர் பட்டாளம் சொன்னது மிக சந்தோசமாக உள்ளது நாளைய இந்தியா உங்கள் கையில் .அதிரை மக்களே சிந்திப்பீர் வாகளிப்பீர்

    ReplyDelete
  4. சிரமம் பாராமல் நேரங்களை பலவாறாக கழித்து பேட்டி ஒன்றை கருத்துக் கணிப்பாக நமக்கு தந்து என்றும் நாடு நிலையோடு இருக்கும் அதிரை நியூசை பாராட்டாமல் இருக்க முடியாது.

    இருந்தாலும் என்னுடைய கணிப்பு என்னவென்றால், யார் அழுதால் என்ன? யார் சிரித்தால் என்ன? என்று தான் நம் நாடு போய்க் கொண்டிருக்கு. ஒன்று மட்டும் நிச்சயம், என்ன அது? இது தான் உண்மை.

    தற்போது இருக்கின்ற சூழ்நிலையை பார்த்தோமானால் காங்கிரஸ் எவ்வளவோ தேவலாம். ஆனால் காங்கிரஸ் காரங்களே கடுமையாக உழைக்காமல் அப்படியே மேலோட்டமாக போறாங்களே, இதை நினைத்தால்தான் எரிச்சலாக வருகின்றது.

    தி.மு.க, வை எடுத்துக்கொண்டால் ஆரம்பத்திலே கடுமையாக உழைத்தவர் நமது மேலத்தெரு மீராசா காக்கா, உழைத்தவருக்கு தக்க வைக்க தெரியவில்ல.

    இன்று நாங்கள் தான் காங்கிரஸ் காரன் என்று மார்த்தட்டிக் கொள்ளும் சில குடும்பங்களுக்கு அடுத்தவர்களை மதிக்க தெரியவில்லை.

    இப்பவும் சொல்கின்றேன், யார் அழுதால் என்ன? யார் சிரித்தால என்ன?

    நமக்கு இருக்கவே இருக்கு - காலமீனு, பன்னாமீனு, கொடுவாமீனு. இலவச மட்டன் பிரியாணி விருந்து.

    ReplyDelete
  5. Grt job u did nijam bai, whoever media in our town still arent do this kinda of things good effort keep it up

    ReplyDelete
  6. நீங்கள் கருத்தை கேட்டால் எல்லாரிடமும் கேளுங்கள் ஒரே வழியாக கேட்கதிங்க எல்லாரிடமும் கேளுங்கள

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. 'செய்வீர்களா?, செய்வீர்களா' ன்னு அம்மா கேட்பது மாதிரி, 'யாரு வந்தா நல்லா இருக்கும்' என்று திரும்ப திரும்ப கேட்டு அறுக்கிறார்.

    கருத்துக்கணிப்புகள் என்று இதுபோன்ற வீடியோக்கள் போடுவது சட்டவிரோதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருத்துக்கணிப்புகள் நடத்தி அதன் புள்ளி விவரங்களைத் தான் ஊடகங்கள் தரும்.

    அந்தந்த நபர்களை நேரடியாக அணுகி கையூட்டு கொடுத்து வாக்கை மாற்றுவதற்கு இதுபோன்ற முயற்சிகள் உதவும். இம்முயற்சி ஏதோ ஒரு கட்சியின் வேலையாக இருக்கும் என்று எண்ணவும் வாய்ப்பிருக்கு.

    மற்றபடி தொகுதி, கட்சி, வேட்பாளர்களின் நிறை, குறைகளைப் பற்றி மக்களிடம் கருத்து கேட்டு பதிவது தான் சிறந்த முயற்சியாக கொள்ளப்படும்.

    மற்றவைகள் எல்லாம் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ரேஞ்சுதான்.

    ReplyDelete
  9. இது கருத்து கணிப்பு இல்லை. பாலுக்கு வாக்கு அளியுங்கள் என்கிற கருத்து திணிப்பு

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி.

    தேர்தல் கணிப்பு ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றனது, இது முதல் சுற்று, இன்னும் எத்தனை சுற்றுகள் பாக்கி இருக்கின்றது என்று பாட்போம்.

    சில பேர் இதுக்குத்தான் ஓட்டு போடுவேன் என்று பகிரங்கமாக சொல்கின்றனர், சில பேர் கட்சியின் கொடிவர்ணத்தை சால்வையால் தன தோளில் போட்டு மறைமுகமாக சொல்கின்றனர்.

    அருமையான விளக்கம்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  11. பேட்டி எடுப்பதை விட புள்ளி விபரங்கள் நல்லது, இவர்கள் சொல்லும் வேட்பாளர் தோல்வி அடைந்தாள் நாளை ஊர் பொது நலன்காக அனுகுவது இயலாத காரியம். 6 சட்ட மன்ற தொகுதி கொண்டது தஞ்சை MP தொகுதி. அதில் நம்ம ஊர் மட்டும் வெற்றி நிர்ணயிக்கும் மக்கள் தொகை கொண்ட ஊர் அல்ல.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.