.

Pages

Sunday, April 27, 2014

அதிரையில் அதிசய நீருற்று ! தானாக பொங்கி வழியும் நீர் !! [ படங்கள் இணைப்பு ]

அதிரை கரையூர் தெருவை சேர்த்தவர் என் எஸ் இளங்கோவன் இவருடைய மகன் சிட்டி பாபு. அதிரை ஈசிஆர் சாலையை ஒட்டிய பகுதியில் இவருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த பகுதியில் பல குடும்பங்கள் வீடு கட்டி குடியமர்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும் நோக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 960 அடியில் புதிதாக போர்வெல் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். போர்வெல் பணிகள் அனைத்தும் நிறைவுற்றபிறகு இன்ப அதிர்ச்சியாக எவ்வித மின் இணைப்பு இல்லாமலும், நீர்முழ்கி மோட்டார் பொருத்தாமலும், புதைக்கபட்ட குழாயிலிருந்து தானாகவே தண்ணீர் நீருற்றுபோல் பொங்கிவழிகிறது. கடந்த ஒரு வார காலமாக வெளியாகிக்கொண்டிருக்கும் இந்த அதிசய நீருற்றால் அந்தபகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

தகவலறிந்த அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு தினமும் வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் அப்பகுதியினர் வழிந்து ஓடும் தண்ணீரை அன்றாட தேவைகளுக்கும், குளங்களில் தேக்கி வைத்தும் பயன்படுத்தி வருகின்றனர். கடும் வெப்பத்தால் தற்போது வறண்டு காணப்படும் அதிரைக்கு இந்த தண்ணீர் வரப்பிரசாதாமாக அமைந்துவிட்டது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் நடராஜன், ராஜ்குமார், மற்றும் பாட்டி ஆகியோர் நம்மிடம் கூறுகையில்....



இந்த நீருற்று குறித்து குடிநீர் தொடர்புடைய அலுவலர் நம்மிடம் கூறுகையில்...
பூமிக்கடியில் ஒவ்வொரு நிலைகளில் ஏற்படும் வெப்ப அழுத்தம் காரணமாக இதுபோன்ற நீருற்று ஏற்படுகிறது. தானாக பொங்கிவழியும் நீருற்றை முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன்பிறகே பயன்படுத்த வேண்டும் என்றார்.




10 comments:

  1. அதிரையில் தண்ணீர் பஞ்சம் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இருந்தோம். பிறகு நாம் என்னன்னா முயற்சிகள் செய்தோம் இருந்தும் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் நாம் அல்லாஹ்வை தொழுது வணங்கி அவனிடம் கையேந்தி யா அல்லாஹ் எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்சனையே தீர்த்து வைப்பாயாக என்று அவனிடம் அழுது கேட்டதால் இன்று நமதுருக்கு தண்ணீர் பிரச்சன்னை தீர்ந்துள்ளது. ஒரு நாள் தொழுது அவனிடம் கையேந்தி கேட்டதற்கே அவன் நமக்கு உதவி செய்துள்ளான் என்றால் வாழ்நாள் முழுவது நாம் அல்லாஹ்வை வணங்கினால் இருக்கிற எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடுமே அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் அல்லாஹ் ஒருவனையே வணங்குவோம் அவனிடமே கையேந்துவோம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அரசியல், தெரு, இவைகள் உட்புகுந்தால் அம்போ தான்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer.
    Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. 1000 அடி தோண்டுவதற்கு அரசு அனுமதி வேண்டுமா? ஒரு வேளை தண்ணீருக்கு பதில் விஷ வாயு, நெருப்பு, எரிபொருள்கள், இன்னும் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் வந்தால் இந்த ஊருக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.

      Delete
  4. சுற்றி வட்டாரங்களில் போர்வெளில் காற்று தான் வருது, மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மோட்டர் இருந்தும் தண்ணீர் வரல, இவை தவிர்த்து தண்ணீர் வருவது ஆச்சர்யம் தான்.

    போன தடவை மீடியவால் ஒருத்தர் சிக்கினார் அதே போல இதுவும் ஏதோ வகையில் சிக்குமோ?

    அந்த பகுதியில் இனி மனை ரேட் தனி தான் போங்க.

    ReplyDelete
  5. இது ஆர்ட்டீசியன் என்று சொல்லும் ஊற்றாக இருக்கலாம். எப்படியோ நமதூரில் தண்ணீர் பஞ்சம் நீங்கினால் நல்லது தானே.

    ReplyDelete
  6. This location 4 side covered by temple East side Ayyannar kovil, west side Mariyamman kovil, north side Throbathayamman kovil, south side Vinayager kovil, because of that reason the water will coming like river, so all the peoples do some pooja for all those temples. Say all SAMI SARANAM…..!!

    ReplyDelete
  7. அல்லாஹ் மிக்க கருணையுடையவனாகவே இருக்கின்றான்

    ReplyDelete
  8. நிச்சயமாக மறைத்து வைக்கப்பட்ட விசயங்களை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
    இந்த நிலத்தின் சொந்தகாரர் ஊர்நலன் கருதி இதை நாட்டிற்கு அர்ப்பணம் செய்யவேண்டும் மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் இதில் நீர் தேக்க தொட்டிகட்டி நீரை நமதூருக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தால் நலம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.