.

Pages

Monday, April 7, 2014

அப்துல் ரஹ்மான் வெற்றிக்காக வேலூரில் வாக்கு சேகரிக்கும் அதிரையர்கள் !

வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் வெற்றிக்காக முஸ்லீம் லீக் நகர நிர்வாகிகள் வேலூரில் மும்முரமாக களத்தில் நின்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக நகர தலைவர் K.K. ஹாஜா தலைமையில், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், A. சேக் அப்துல்லா, அபூபக்கர், மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது, சம்சுதீன், சாகுல் ஹமீது, அன்வர் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூருக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து கடந்த சில நாட்களாக வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மும்முரமாக களத்தில் நின்று வாக்கு சேகரித்து வரும் முஸ்லீம் லீக்கின் பொறுப்பளார் அதிரை சேக் அப்துல்லா நம்மிடம் கூறுகையில்...
'இந்திய டுடே பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் இந்தியளவில் சிறந்த சேவையாற்றிய 20 பாராளுமன்ற உறுப்பினர்களில் நமது வெற்றி வேட்பாளர் 6 வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் அவர் மேற்கொண்ட சிறந்த பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இவற்றை நாங்கள் கருதுகிறோம். இதற்கு வலுசேர்க்கும் விதமாக சென்ற இடமெல்லாம் வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்றார்.









13 comments:

  1. வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக வேலூர், ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு , வாணியம்பாடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற வீதி முனைப் பிரச்சாரத்தில் கடந்தவாரம் கலந்து கொண்டேன்.

    சென்ற முறை பெற்ற வாக்குகளைவிட இந்த முறை தம்பி அப்துல் ரஹ்மான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ். அனைவரும் அவ்வாறே விரும்புவோம். துவா செய்வோம்.

      Delete
  2. -தாமரைப் பூ வாடிவிடும்!. இரட்டை இலை வதங்கி விடும். !மாம்பழம் அழுகிவிடும்!. கை தடுத்து நிறுத்திவிடும்! ஏணிதான் தரையில் இருக்கும் மனிதனை உயரத்துக்கு ஏற்றி விடும்.

    - முத்துபேட்டையில் இருந்து ஒரு முத்தைக் கொண்டு வந்து இந்த வேலூர் கிரீடத்தில் பதித்து இருக்கிறோம்.

    - இந்தியப் பாராளுமன்றத்துக்கே புகழ் சேர்த்த தொகுதி வேலூர் என்பதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் ரஹ்மான் அந்தப் பேரை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் அந்தத் தொகுதிக்கு ஒரு வாய்ப்பு.

    - பாராளுமன்றம் நடந்து கொண்டிருந்தாலும் தொழுகை நேரம் வரும்போது எழுந்து போய் தொழுதுவிட்டு வரும் நல்ல பழக்கம் உள்ளவர் என்று இந்தியாவே பாராட்டும் நமது சகோதரர்.

    - துரோகங்களையும் வென்று -எதிரிகளையும் வென்று வெல்வார் மீண்டும் செல்வார்.

    - திமுக வினரின் ஆரம்ப எதிர்ப்பு கலைஞ்ரின் கட்டளையால் தவிடுபொடியாக்கப் பட்டது. துரை முருகன் களப்பணி யை தலைமை ஏற்று ஆற்றுகிறார்.

    இன்று வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட்டதாக அறிவிக்கப் பட்டது..

    அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. DMK க்கு நேரம் சரி இல்லை அதோடுமல்லாமல் காங்கிரசும் கைய் மடக்கிறச்சு - கரை சேர்வது கஷ்டம், அப்படி வென்றாலும் யாரை மத்தியில் ஆதரிப்பார்கள் ?

    ReplyDelete
  4. தமிழக முஸ்லிம்களே இப்போது நாம். சமுதாய இயக்கங்களால் பிரிந்து.தெரிதே மோடியை ஜெயிக்க வைக்கபோறோம்.
    அவன் ஜெயித பிறகு. இயக்கங்கள் வாரியாக அடிக்க மாட்டான். ஒட்டு மொத்தமாக அடிப்பான்.
    அப்போது நாம் ஒன்று செருவோம்.

    ReplyDelete
  5. எவர் ஜெய்த்தாலும் கலிமா சொன்னவனுக்கு Zero லாபம் இந்தியாவில்

    ReplyDelete
  6. அனைவருக்கும் ஒரே சிவில் திட்டம். இது ஒன்றே போதுமே.

    வைக்கோ எதிர்க்கிறார். ஆனால் மோடிக்கு ஓட்டுப்போடச் சொல்கிறார். மோடி வெற்றி பெற வேண்டும் என்கிறார். அப்படியானால் இவரும் எதோ ஒருவகையில் மறைமுகமாக இஸ்லாமியருக்கு எதிரான அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பதை ஆதரிக்கிறார்.

    அதிமுக மோடியை எதிர்க்கவில்லை. இவர்களும் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பதை ஆதரிக்கிறார்கள்.

    அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்றால் நாம் நம் ஷரியத் சட்டங்களை விட்டு விட வேண்டும் என்ற அர்த்தம். இதனை இக்கட்சிகளுக்கு ஆதரவு கேட்கும் இஸ்லாமியர்கள் ஏற்கிறார்களா ?

    ReplyDelete
  7. Aruma yana karuththu.
    tntj,,,intj pathel solle akaveandum.
    desambar 6 kku vasul veatdai pannnum eesusu lameyar pathel ?

    ReplyDelete
  8. அனைவருக்கும் ஒரே சிவில் திட்டம்.

    இது இலகுவாக இஸ்லாமியனை அவன் மார்க்கம் நீக்கும் தந்திரம்.

    இந்த தருணத்தில் சிந்திக்காவிடில் நம்மை நாம் இழந்துவிட்டோம் என்றே பொருள்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் கண்ணியம் நிறைந்த பனாத்வால அன்று இந்த கருத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து பாராளுமன்றத்தில் முழக்கம் எழுப்பியதால் அன்று இந்த சதிகள் முடக்கப்பட்டது என்பதை நம் சமூகம் மறந்துவிடாது. மீண்டும் இதனை சட்டமாக்க முயலும் இந்த நரிகளின் தந்திரத்திற்கு நாம் பலியாகிவிட வேண்டாம்.

    அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் நிலைக்கு வெடிவைக்கும் இந்த அனைவருக்கும் ஒரே சிவில் திட்டம் என்பதை முற்றிலும் எதிர்க்க இந்த வாக்குரிமையை கவனமுடன் கையாள வேண்டும். அரசியலில் இனம் மதம் வேறுபாடு பாராது அனைத்து இந்தியனும் ஒன்றுபட்டே ஆகவேண்டிய தருணம் இது. இல்லையேல் இந்த அனைவருக்கும் ஒரே சிவில் திட்டம் நம்மை அழித்துவிடும். சிந்திப்போம் சிறப்புடன் வாழ்வோம்.

    ReplyDelete
  9. பி ஜெ பி யின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருக்கிறது. ராமர் கோயிலை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம், காஷ்மீர் தனி அந்தஸ்தை நீக்குவோம் ஆகியன உள்ளடக்கம். இவற்றை எதிர்க்க தமிழ்நாட்டில் இருந்து நாலு எம்பிக்களும் வெற்றி பெற்று செல்ல வேண்டாமா?

    ReplyDelete
  10. திரு.அப்துல் ரஹ்மான் அவர்கள் பிரச்சாரத்தை தொடங்கியது கோவிலில்
    ஆதாரம் மார்ச் 27 தினதந்தியில் உள்ளது

    ReplyDelete
  11. திரு இப்ராஹீம் அலி என்ன சொல்கிறார் என்பது தெளிவில்லை.

    ReplyDelete
  12. பாராளுமன்றம் நடந்து கொண்டிருந்தாலும் தொழுகை நேரம் வரும்போது எழுந்து போய் தொழுதுவிட்டு வரும் நல்ல பழக்கம் உள்ளவர் என்று இந்தியாவே பாராட்டும் நமது சகோதரர். இன்ஷா அல்லாஹ் இந்த பெருமை கண்டிப்பாக தொடரும்.............

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.