இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் தலைமையுரை நிகழ்த, ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி ஜோசப் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் S. ஜோசப் அருள் ஜெயராஜ் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
முன்னதாக ஆங்கிலத்துறை பேராசிரியை E. பிளோமினா துறையின் சார்பில் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனை பட்டியலை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆங்கிலத்துறை பேராசிரியை திருமதி M.A தஸ்லீமா இனிய ஆங்கிலத்தில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Wishing you all the best Prof. Thasleema.
ReplyDelete