.

Pages

Monday, April 7, 2014

முத்துப்பேட்டை காஸ் டேங்கர் லாரி விபத்து ! 38 மணி நேர திக்..திக்.. சம்பவம் ! [ படங்கள் இணைப்பு ]

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நாகை அருகே உள்ள நரிமனத்திலிருந்து 35 ஆயிரம் டன் எடைக் கொண்ட ஆறு டேங்கர் லாரிகளில் சமையலுக்கு பயன்படுத்தும் காஸ் எடுத்து செல்லப்பட்டது. கடந்த 4-ந் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்த லாரிகள் இரவு 10.30 மணிக்கு முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது தம்பிக்கோட்டை கீழக்காடு பாமனி ஆறு அருகே எதிர்பாராத விதமாக முதலில் வந்த லாரி திடீர் என்று அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் வாஞ்சிநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் டேங்கர்தனியாக கழன்று சென்றது. இதில் டேங்கர் வால்வு சேதம் அடைந்து காஸ் கசிய தொடங்கியது. உடனடியாக போலீஸாh,; வருவாய் துறை, தீயனைப்பு படையினர் அங்கு வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த வழியாக போக்கு வரத்து நிருத்தப்பட்டு மன்னார்குடி, பெருங்கவாழ்ந்தான் வழியாக திருப்பிவிடப்பட்டது. லாரி கவிந்த இடத்தின் அருகில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வடகாடு தோப்பு, மேலக்காடு மாரியம்மன் கோவில் மண்டபங்களில் 2 தினங்களாக தங்க வைக்கப்பட்டன. 1 கி.மீட்டர் சுற்றளவில் யாரும் அடுப்பு எறிக்க வேண்டாம், பீடி சிகரெட் பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவித்தனர். காஸ் டேங்கரிலிருந்து வெளியாகும் எரி வாய்வை கட்டுப்படுத்த முத்துப்பேட்டை உட்பட 5 தீயனைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் கவிழ்ந்த லாரி மற்றும் டேங்கரை மீட்க 2 ராச்சத கிரேன்கள் மற்றும் சாதனங்கள், மீட்பு குழுவினர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்தனர். மீட்பு பணி நடந்துக் கொண்டிருக்கும் போது எதுவும் நடக்கலாம் என்பதால் சுற்று வட்டார கிராமத்தினர். திக்..திக்.. என்ற அச்சத்துடன் காணப்பட்டனர். சுமார் 38 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்பு பணியில் காஸ் டேங்கரை நேற்று அதிகாலை 4 மணிக்கு சாலைக்கு கொண்டு வந்தனர். பிறகு டெங்கருக்கு வீல்கள் பொறுத்தும் பணி துவங்கி நேற்று காலை 10 மணிக்கு முடிந்தது. நேற்று மதியம் 12 மணிக்கு லாரியில் இணைக்கப்பட்டு கேஸ் டேங்கரை மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை காஸ் ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டது. பிறகு நேற்று மதியம் 1 மணிக்கு முத்துப்பேட்டை – பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து துவங்கியது.

மீட்பு துளிகள் - எக்ஸ்ட்ரா:
1. விபத்து ஆன 38 மணி நேரம் ஆகியும் அதனை மீக்கும் முயற்சியில் கால தாமதம் ஏற்பட்டு வந்ததால் சுற்று வட்டார கிராம மக்கள் பெரும் கோபத்தில் காணப்பட்டனர்.

2. கேஸ் கசிவின் காரணமாக அப்பொழுது இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மணிகண்டனுக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டது. மேலும் பலருக்கு பாதிப்புகள் ஏற்பட்டதால் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனை டாக்டர் விஜயராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், செவிலியர் சாந்தி மற்றும் பலர் கொண்ட குழு கிராம முழுவதும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்தனர்.

3. சம்பவம் நடந்த முதல் நாள் இரவு 10.30 மணி முதல் நேற்று காலை வரை தொடற்சியாக முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் தூங்காமல் விழித்துக் கொன்டே சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதனை பொதுமக்கள் பாராட்டினர்.

4. திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் ராஜகோபால் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் சம்பவம் தொடர்ச்சி முதல் நேற்று காலை வரை முகாமிட்டு பணிகளை செய்து வந்தனர்.

5. இரவில் மீட்பு பணி தடை இல்லாமல் நடக்க தற்காலிக விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

6. சம்பவம் நடந்த நேரம் முதல் தொடர்ச்சியாக சுற்று வட்டார கிராமத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது.

நன்றி : 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.