.

Pages

Saturday, April 5, 2014

ஆடு முட்டியதில் செய்னாங் குளம் இரும்பு கேட் சாய்ந்தது [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குளத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திறப்புவிழா காணப்படவுள்ளது.

தண்ணீர் இல்லாமல் காட்சியளிக்கும் செய்னா குளத்தின் கரையை சுற்றி இரும்பு கம்பியால் முள் வேலி அமைத்து ஆடு மாடுகள் உள்ளே புகாதாவாறு தடுக்கப்பட்டிருந்தது. மேலும் குளக்கரையின் இருபுறங்களிலும் இரும்பு கேட் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று மாலை குளத்தின் உள்ளே செல்வதற்காக அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் மூடியிருந்த இரும்பு கேட்டை தலையால் முட்டி திறப்பதற்கு முயற்சிக்கும்போது திடிரென கீழே சாய்ந்து விழுந்தது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மரைக்கான் நம்மிடம் கூறுகையில்...
'நேற்று மாலை எனது வீட்டின் மாடியில் இருக்கும் போது எதார்ச்சையாக கீழே எனது கவனம் சென்றது. அப்போது அங்கு மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் கூட்டம் கேட்டை திறக்க முயற்சித்துகொண்டிருந்தன. திடிரென சத்தத்துடன் கேட் கீழே சாய்ந்து விழுந்தது. அதிர்ச்சியடைந்த ஆடுகள் கூட்டம் அங்கிருந்து அலறியடித்து நாலாபுறமும் ஓடின. அருகில் நின்று இதை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தரமற்ற தூண்களை கொண்டு மெல்லிய இரும்பு கேட் அமைக்கப்பட்டிருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நல்ல வேலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது விழாமல் இருந்தது' என்றார் ஆச்சரியத்துடன்.






10 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ஆடு முட்டி இரும்பு கேட்டு, அட! ஆட்டுக்கார அலமேலு வந்துடுச்சோ, ஒரு வேளை இந்த அலமேலு (தேர்தல்) தேரை தள்ளுவதற்கு பதிலாக இந்த கேட்டை தள்ளி விட்டதோ.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. ஆட்டையை போடுறது ஆட்டுக்கு தெரிகிறது, ஆட்டு மந்தைகளான மக்களுக்கு தெரியமாட்டேங்குறது.

    ReplyDelete
  3. நீரில்லா குளத்திற்கு ஐம்பது இலட்சம் செலவு செய்து வேலி அடைக்க வேண்டிய தேவை என்ன? பக்தர்கள் புனித நீராடும் குளமும் அல்லவே. சரியான காரணம் என்ன? தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன்.

    முந்தைய பதிவு இணைப்பை தர முடியுமா?

    ReplyDelete
  4. ரொம்ப ஸ்ட்ராங்கானதுதான்

    ReplyDelete
  5. இப்ப செயினா குளம் இல்லை,

    செயினா விளையாட்டு மைதானம்

    ReplyDelete
  6. ஊழல் நடந்திருக்குமோ எனும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ள இதுதொடர்பில் சற்றுமுன்பு சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினரிடம் தொலைபேசியில் பேசினேன்.

    உள்ளூர் தன்னார்வலர்கள் அவர்களை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    தொலைபேசி எண்:+91 76 67 100100

    சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சென்னையிலிருந்து இயங்கும் ஒரு தன்னார்வ பொதுநல இயக்கம். சட்டரீதியான உதவிகளையும், ஆர்டிஐ தொடர்பான தகவல்களுக்காகவும் இலவசமாக உதவுகிறது.

    முகநூல் பக்கம்: https://www.facebook.com/sattapanchayath/info

    ReplyDelete
  7. ஆடு முட்டி சுவர் சாய்ந்தது - அப்போ யானை போய் இருந்தால் அதன் அதிர்வில் விழுந்து விழும். வழக்கம் போல அதிகாரிகள் ஆட்டை போட்டதை ஆடு காட்டி கொடுத்து விட்டது- விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும். பொது நல வழக்கு போடலாமே!!

    ReplyDelete
  8. ஆடு முட்டி சுவர் சாய்கிறது என்றால் அஸ்திவாரம் சரியாக போடாமல் கட்டியிருப்பார்கள். செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க ருபாய் 50 இலட்சம் பேசப்பட்டு அதன் அடிப்படையில் தரம் இல்லாமல் இந்த குளத்தின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. முதலில் இதை கட்டிகொடுத்த மேஸ்திரியே பிடித்து விசாரித்தால் உண்மை வெளியே வரும். ஊரின் வளர்ச்சியே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  9. கமிசன் கேட்டு பேரம் பேசியவர்கள் எங்க போனங்க? கான்ட்ரகடர்யிடம் சமூக ஆர்வர்கள் கேட்பார்களா.........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.