தண்ணீர் இல்லாமல் காட்சியளிக்கும் செய்னா குளத்தின் கரையை சுற்றி இரும்பு கம்பியால் முள் வேலி அமைத்து ஆடு மாடுகள் உள்ளே புகாதாவாறு தடுக்கப்பட்டிருந்தது. மேலும் குளக்கரையின் இருபுறங்களிலும் இரும்பு கேட் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று மாலை குளத்தின் உள்ளே செல்வதற்காக அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் மூடியிருந்த இரும்பு கேட்டை தலையால் முட்டி திறப்பதற்கு முயற்சிக்கும்போது திடிரென கீழே சாய்ந்து விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மரைக்கான் நம்மிடம் கூறுகையில்...
'நேற்று மாலை எனது வீட்டின் மாடியில் இருக்கும் போது எதார்ச்சையாக கீழே எனது கவனம் சென்றது. அப்போது அங்கு மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் கூட்டம் கேட்டை திறக்க முயற்சித்துகொண்டிருந்தன. திடிரென சத்தத்துடன் கேட் கீழே சாய்ந்து விழுந்தது. அதிர்ச்சியடைந்த ஆடுகள் கூட்டம் அங்கிருந்து அலறியடித்து நாலாபுறமும் ஓடின. அருகில் நின்று இதை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தரமற்ற தூண்களை கொண்டு மெல்லிய இரும்பு கேட் அமைக்கப்பட்டிருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நல்ல வேலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது விழாமல் இருந்தது' என்றார் ஆச்சரியத்துடன்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஆடு முட்டி இரும்பு கேட்டு, அட! ஆட்டுக்கார அலமேலு வந்துடுச்சோ, ஒரு வேளை இந்த அலமேலு (தேர்தல்) தேரை தள்ளுவதற்கு பதிலாக இந்த கேட்டை தள்ளி விட்டதோ.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
ஆட்டையை போடுறது ஆட்டுக்கு தெரிகிறது, ஆட்டு மந்தைகளான மக்களுக்கு தெரியமாட்டேங்குறது.
ReplyDeleteநீரில்லா குளத்திற்கு ஐம்பது இலட்சம் செலவு செய்து வேலி அடைக்க வேண்டிய தேவை என்ன? பக்தர்கள் புனித நீராடும் குளமும் அல்லவே. சரியான காரணம் என்ன? தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன்.
ReplyDeleteமுந்தைய பதிவு இணைப்பை தர முடியுமா?
ரொம்ப ஸ்ட்ராங்கானதுதான்
ReplyDeleteஇப்ப செயினா குளம் இல்லை,
ReplyDeleteசெயினா விளையாட்டு மைதானம்
ஊழல் நடந்திருக்குமோ எனும் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ள இதுதொடர்பில் சற்றுமுன்பு சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினரிடம் தொலைபேசியில் பேசினேன்.
ReplyDeleteஉள்ளூர் தன்னார்வலர்கள் அவர்களை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொலைபேசி எண்:+91 76 67 100100
சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சென்னையிலிருந்து இயங்கும் ஒரு தன்னார்வ பொதுநல இயக்கம். சட்டரீதியான உதவிகளையும், ஆர்டிஐ தொடர்பான தகவல்களுக்காகவும் இலவசமாக உதவுகிறது.
முகநூல் பக்கம்: https://www.facebook.com/sattapanchayath/info
ஆடு முட்டி சுவர் சாய்ந்தது - அப்போ யானை போய் இருந்தால் அதன் அதிர்வில் விழுந்து விழும். வழக்கம் போல அதிகாரிகள் ஆட்டை போட்டதை ஆடு காட்டி கொடுத்து விட்டது- விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும். பொது நல வழக்கு போடலாமே!!
ReplyDeleteஆடு முட்டி சுவர் சாய்கிறது என்றால் அஸ்திவாரம் சரியாக போடாமல் கட்டியிருப்பார்கள். செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க ருபாய் 50 இலட்சம் பேசப்பட்டு அதன் அடிப்படையில் தரம் இல்லாமல் இந்த குளத்தின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. முதலில் இதை கட்டிகொடுத்த மேஸ்திரியே பிடித்து விசாரித்தால் உண்மை வெளியே வரும். ஊரின் வளர்ச்சியே ரொம்ப முக்கியம்.
ReplyDeleteகமிசன் கேட்டு பேரம் பேசியவர்கள் எங்க போனங்க? கான்ட்ரகடர்யிடம் சமூக ஆர்வர்கள் கேட்பார்களா.........
ReplyDeleteo really!!!!!!!!!
ReplyDelete