.

Pages

Monday, April 7, 2014

புதுத்தெரு ஜமாத் தலைவர் இஷாக் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் வாக்கு சேகரிப்பு !

புதுத்தெரு ஜமாத் தலைவர் இஷாக் அவர்களின் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்த சிறப்பு கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலுவிற்கு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்திற்கு புதுத்தெரு ஜமாத் தலைவர் இஷாக் தலைமை வகிக்க. இதில் வது வார்டு பகுதியில் காணப்படும் குறைகளை பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அனைத்தையும் தாம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதில் கடந்த காலங்களில் வேட்பாளர் டி.ஆர் பாலு நிகழ்த்திய சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப், திமுக 15 வது வார்டு பொருளாளர் சேக்தாவூது, திமுக 16 வது வார்டு செயலாளர் யூசுப் மற்றும் ஏராளமான மஹல்லாவாசிகள் கலந்துகொண்டார்கள். ஹாஜா நகர், புதுத்தெரு பகுதி இளைஞர்கள் பலர் திரளாக பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள்.

முன்னதாக வந்திருந்த அனைவரையும் புதுத்தெரு ஜமாத் தலைவர் இஷாக் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.







6 comments:

  1. பாலுவிற்கு உள்குத்து வேலை எல்லா இடத்திலும் நடப்பதால் தோல்விதான் தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம்!.காலஜ் ரோடு - மார்கெட் போகும் ரோடு ரொம்ப மோசம் மழைகாலத்தில் சொல்லவே வேண்டாம், கவனிப்பாரா இந்த சேர்மன்.

    ReplyDelete
  2. Where is Mr. Ansarkhan? 11வது வார்டு உறுப்பினர் அன்சர்கானை இந்த கூட்டத்தில் காணவில்லையே ஏன்?

    ReplyDelete
  3. பாலுவின் வெற்றி உருதி...............சேர்மன் கட்டுப்பாடில் இல்லாத பணியை அவரால் எப்படி செய்யமுடியும்........... இது கூட தெரியாத கனி எப்போது கனியும்?

    ReplyDelete
    Replies
    1. தெருவில் குப்பை அல்லாமல் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நடக்கவே முடியாது நான் குறிப்பிட்ட பாதை. இந்த பணியே மேற்பார்வை விடுவது தெருவின் கவுன்சிலர்/ சேர்மன் தான். உங்க கட்சி சேர்ந்த கவுன்சிலர் கூட்டத்துக்கு வரலே ஏன்?

      சேது சமுத்திர திட்டத்திலிருந்து BSNL வரை ஊழல் செய்த கருணாநிதி என்று முதல்வர் கூர்கிறார் உங்க தான தலைவன் ஏன் மவுனியாக இருக்கிறார்? நடப்பது மத்திய தேர்தல் மாநில தேர்தல் அல்ல. இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டை இருளில் மூழ்கியது பெரிய சாதனை.

      Delete
  4. பாலுவின் வெற்றி உருதி...............சேர்மன் கட்டுப்பாடில் இல்லாத பணியை அவரால் எப்படி செய்யமுடியும்........... இது கூட தெரியாத கனி எப்போது கனியும்?

    ஆக சூப்பர்.................... எப்படியோ வெற்றி வேட்பாளருக்கு என் வாழ்த்துக்குள்.

    ReplyDelete
  5. பட்டுக்கோட்டை மேலும் மேலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறது. நம்ம தொகுதி MLA, MP, அனைவரும் முதலில் பட்டுக்கோட்டையே தான் கவனிக்கிறார்கள். ஏன் நமதூர் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லையா பிறகு ஏன் நமதூர் வளர்ச்சிக்கு உதவ மறுக்கிறார்கள். பேருந்து நிலையம் அமைக்கவும், அரசு மருத்துவமனையே விரிவுபடுத்திதருமாறும் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், எங்கள் அடிப்படை தேவையே நிறைவேற்றி தருமாறும், எங்கள் ஊருக்கு புகைவண்டி வர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். பட்டுக்கோட்டை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கிறார்கள் அந்த நிதி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. நம்ம ஊருக்கு செய்ய சொன்னால் மட்டும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். நமதூர் மக்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கும், இன்னொருபக்கம் திமுக கட்சி வெற்றி பெறவும், இன்னொருபக்கம் அதிமுக கட்சி வெற்றி பெறுவதற்கும் நம்ம உயிரை கொடுத்து உழைக்கிறோம். இதில் ஒரு கட்சி வெற்றி பெரும் அந்த கட்சி வேட்பாளரிடம் எங்கள் ஊருக்கு இந்த இந்த வசதிகள் செய்து தாருங்கள் என்று கூறினால் இரண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்குள் ஐந்து ஆண்டு முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் செய்து தருகிறேன் என்று கூறிவிடுவார். நாம் அவர்கள் வெற்றி பெற இரவு, பகல் பாராமல் உழைத்ததற்கு நமதுருக்கும், நமதூர் மக்களுக்கும் அமைதிப்படை அல்வாவை கொடுத்து விட்டு சென்றுவிடுவார். அப்புறம் என்ன அடுத்த தேர்தல்தான். மக்களே நீங்கள் கட்சியால் வேறுபட்டு இருந்தாலும் நீங்கள் அனைவரும் அதிராம்பட்டினத்தை சார்தவர்கள் என்பதை மட்டும் மறந்துவிட கூடாது. நமதுருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற நாம் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். ஊரின் முன்னேற்றமே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.