.

Pages

Thursday, April 3, 2014

நகர திமுகவில் புறக்கணிப்பா !? பேரூராட்சி தலைவரோடு நேர்காணல் ! [ காணொளி ]

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நகர கிளை செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் ஒரு அணியாகவும், மற்றொரு அணியாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையிலும் கட்சி வேட்பாளர் டிஆர் பாலுவுக்காக தேர்தல் பணிகள் செய்து வருகின்றனர். இவர்கள் இரு அணிகளாக இருந்து தனித்தனியாக செயல்படுவதால் தேர்தலில் பெற இருக்கிற வாக்குகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்படாது என்றாலும், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவும் கருத்து பெரும் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகின்றன.

தனது கட்சி வேட்பாளர் டிஆர் பாலுவுக்காக வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவரும் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லமை அவரது இல்லத்தில் சந்தித்து நகர கிளை சார்பில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் தென்படாதது குறித்தும், வேட்பாளருக்காக மேற்கொள்ள இருக்கும் பிராசார வியூகம் என்ன ? என்பது குறித்து அவரது கருத்தை கேட்டோம்.

25 comments:

  1. உங்களுக்கு புரிஞ்ச சரி !

    ReplyDelete
  2. நகர தந்தையை ஓரங்கட்ட நினைப்பது கண்டிக்கதக்கது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்காதது வருந்ததக்கது.

    ReplyDelete
  3. எல்லோரையும் அணுசரித்து போவதுதான் நல்லது இப்படி பிரித்து பேசுவது பிற்காலத்தில் நல்லதாக தெரியலே...........!!!!!!

    ReplyDelete
  4. எல்லோரையும் அணுசரித்து போவதுதான் நல்லது இப்படி பிரித்து பேசுவது பிற்காலத்தில் நல்லதாக தெரியலே...........! அயோக்கியர்களின் கடைசி புகழிடம் அரசியல்......!!!!!உங்களுக்கு புரிஞ்ச சரி !

    ReplyDelete
  5. காசு கொடுத்து வேலைக்கு சேர்பவனும், பணத்தை தண்ணீராய் செலவு செய்து பதவியை அடைபவனும் ஒன்றே.

    இருவருக்கும் தலைக்கனமும், ஈகோவும் இருக்கும்.

    நான் பொதுவா சொன்னேன்.

    மற்றபடி நகர திமுக படு கேவலமாய் இருப்பது இவருக்கு இப்போது தான் தெரிகிறதா? அல் அமீன் பள்ளி விவகாரத்தில் நகர திமுக நெருக்குதல் காரணமாக தானே காங்கிரசு தலைவர் இம்சை கொடுத்துக் கொண்டிருந்தார்.

    திமுகவில் சேர்வதற்கு முன் அதிமுகவில் துண்டு போட்டுவிட்டு வந்தவர்தானே நம்ம சேர்மன்.

    இப்போது எடிட் செய்யாமல் வந்திருக்கும் இந்த பேச்சு அவருக்கு சரியான அரசியல் எதிர்காலம் இல்லை அல்லது அரசியலில் ஆர்வம் குன்றியுள்ளதாக காட்டுகிறது.

    எப்படி இருந்தாலும் தேர்தலில் கடுமையான பணம் செலவு செய்ய நீங்கள் முன்னுதாரனமாகி விட்டீர்கள்.

    டிஆர் பாலுவிற்கு ஓட்டு கேட்கிறேன் பேர்வழி என்று தலைமையேற்று தயவு செய்து வாக்காளர்களுக்கு உங்கள் கையிலிருந்து பணம் பட்டுவாடா செய்து உங்களது தரத்தை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. நமதூர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களும், அவரை சார்தவர்களும் நமது ஊரின் முன்னேற்றதிற்கு பாடுபட்டுகொண்டு இருக்கையில் மற்றொரு கூட்டம் அவருக்கு ஒத்துழைப்பதில்லை காரணம் அஸ்லம் அவர்களும், அவரை சார்தவர்களும் ஊருக்கு நல்லது செய்யும் போது அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நல்ல பேர் கிடைக்கும். அப்படி நல்ல பேர் கிடைக்கும் பட்சத்தில் பேரூராட்சி தலைவராக ஆக நினைக்கும் இவர்களுக்கு பெரும் தடையாக இருக்கும். எனவே தான் இவர்கள் பேரூராட்சி தலைவருக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எனவே நமதூர் மக்கள் அனைவரும் நமதூர் முன்னேற்றம் கருதி பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களுக்கு அதிராம்பட்டினம் மக்கள் அனைவரும் அவருக்கு உதவியாக இருந்து அவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

    ReplyDelete
  7. தன் கட்சிகாரர்களே பேரூராட்சி தலைவர்ரை ஓரம் கட்ட நினைப்பது கண்டனதுக்குரியது.

    ReplyDelete
  8. IVARKU VERA VELAI ILLAI..........
    DMK IL IRUNTHUKONDU TNTJ VINARIDAM PALAKUVATHU SARIYA? IVAR ORU MANANILAIYIL ILLAI ENPATHU IVAR PETCHIL THERUKIRATHU?

    ReplyDelete
  9. karuthu kural நண்பரே DMK வில் இருந்து கொண்டு TNTJ வினரிடம் பழகுவது சரியா என்று கேட்கிறிர்கள். உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஒற்றுமையாக வாழ முடியாது. karuthu kural நண்பரே நீங்கள் DMK கட்சியில் இருகிறிர்கள். உங்க அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் அனைவரும் வேறு கட்சியில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் யாரிடமும் பேசமாட்டிங்களா, பழகமாட்டிங்களா, வீட்டில் சோறு கொடுத்தால் சாப்பிடமாட்டிங்களா அல்லது சந்தித்துக்கொள்ளமாட்டிங்களா. மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  10. Karuthu kural, thambi mahir neengal oorukuga ethavathu nanmai saiya ninaithal, kurai kooruvathai mattum sollamal..nanmaiyana visayangalila vathu..all are human, nobody is perfect so work together for the good atleast..

    ReplyDelete
  11. பேரூராட்சி தலைவரின் வெளிப்படையான பேச்சு அரசியலில் அனுபவம் இல்லாததை தெள்ள தெளிவாக உணர முடிகிறது. உட்கட்சி பிரச்சனையை பொதுவான இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதுக்கூட இவருக்கு தெரியவில்லை, இவ்வாறு பேசுவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு உகந்ததாக தெரியவில்லை.

    அதிரை சேர்மன் அவர்களே இது போன்ற கேள்விகளுக்கு உங்களின் நடுநிலையான பதிலை சொல்லிவிட்டு(உட்கட்சி பிரச்சனையை வெளியில் காட்டிக்கொள்ளாமல்) மக்கள் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள், மக்கள் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார்கள்.

    ReplyDelete
  12. நமது சேர்மேனை பகைத்துக் கொண்டால். பெருமதிப்பிற்கு உரிய உயர்திரு T for தார். R for ரோடு. பாலு அவர்கள் தோற்பது உறுதி.

    இதை நகர திமுக உணர்ந்தால் சரி.

    ReplyDelete
  13. ENNANGA NETRU MULAITHA CHAIRMAN DMK IL IRUNTHU KONDU AIADMK IL INAIVATHARKU THOOTHU VITATHU YEN? ORU KOLGAYI PIDIPU ILLATHA ORU IVARAI OORIL ULLAVARGAL SIRIPU CHAIRMAN ENDRA PEYARIL ALAIPATHU ENGAL KATHUKALIL VILUVATHU KOODIYA VIRAVIL UNGALUKUM ETTUM.ADIPADAYANA ORU VISAYAM ONDRU ELLA ARASIYAL KATCHIYILUM NAGARA SEYALALAR KEEL THAAN ELLA NIGALCHIKALUM NADAIPERUM.CHAIRMAN AVARGAL THANIYAGA SILA PERAI KOOTIKONDU TR.BALU AVARGALAI SANTHIPATHU AVARUKAKA ULAIKIREN ENDRU KORRUVATHU ELLAM
    Mr.MK ALAGIRI POL IVARUKUM KATCHIYIL IRUNTHU MIGA VIRAVIL VELIYETRAPADUVAAR.CHAIRMAN ASLAM KU ADIGAMAGA ULLATCHI THERTHALIL ULAITHAVARGAL ELLAM IPPOTHU AVARIDAM NERUNGUVATHILAI................?NANDRI MARANTHA MANITHAR AGIVITTAR ENDRA SOLL ADIGAMAGA AVARIN THOLARGAL MATRUM KUDUMPATHINAAR PETCHIKALUM CHAIRMANUKU ETHIRAGA ULLATHU..................

    ReplyDelete
    Replies
    1. You dont have name? ur parents didnt name u??? Pls dont behave rubbish...

      Delete
  14. சேர்மன் அஸ்லம் அவர்களின் கடந்தகால வரலாற்றை திரும்பிப்பார்த்தால், அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்பது அனைவருக்கும் புரியும்.

    தொடக்கத்தில் சிறந்த சமூக சேவகர், அதிரை பைத்துல்மாலிற்கு பொருளாதார உதவி திரட்டிக்கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். ஆரம்பகாலத்திலிருந்தே தவ்ஹீத் எதிர்ப்பாளர், திருக்குர்'ஆன் மாநாடுகளில் தவ்ஹீதிற்கு எதிரான ஆலிம்களை களம் இறக்கியவர்.

    ஹைதர் அலி ஆலிம் நமதூருக்கு புதிதாக வந்த பொழுது சித்திக் பள்ளியில் ரமலான் மாதங்களில் மட்டும் வந்து சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரின் மார்க்க சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது ஆயிஷா மகளிர் அரங்கத்தில் வாரமொருமுறையும் ரமலான் மாதம் தினமும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதன் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது.
    அத்தோடு நில்லாமல், ஊரின் பெரும்பாலான இடங்களில் ஆயிஷா மகளிர் அரங்கம் என்ற பெயரில் குப்பை கூண்டுகளை நிறுவினார், அதன் தொடர்ச்சியாக அப்போதைய சேர்மன் எம்.எம்.எஸ் அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. முதலில் எதிர்த்தார் பின்னர் நட்பு பாராட்டினார்.
    அதன் மூலம் கடந்த ஒவ்வொரு சட்டமன்ற தேர்தல்களின்போது என்.ஆர். ரெங்கராஜனுக்கு ஆதரவாக தனது ஆயிஷா மகளிர் அரங்கத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை வைத்து பெண்களிடம் ஆதரவு கோருவார்.
    எம்.எம்.எஸ் அவர்களுடன் துபாய்க்கு சென்று அங்குள்ள அதிரை மக்களிடம் தன்னை எம்.எம்.எஸ்ஸின் அரசியல் வாரிசை போன்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டார்.

    அதை தொடர்ந்து எம்.எம் எஸ் அவர்களுடன் போகிற இடங்கெளுக்கெல்லாம் கூடவே சென்று அரசியலில் பெரும்புள்ளிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    எம்.எம்.எஸ்ஸின் மறைவிற்கு பின்னர், அவர் சாதிக்க நினைத்த அந்த அரசியல் அரியணையில் அரங்கேறினார்.

    உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பேரம் பேசினார், அது பழிக்கவில்லை, பின்னர் தி.மு.க.வில் பேரம் பழித்தது. அதை தொடர்ந்து எத்தனையோ மூத்த நிர்வாகிகளுக்கு மத்தியில் சேர்மன் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார், அதில் வெற்றியும் பெற்றார்.

    தற்போது இவர் தி.மு.க. வின் நகர செயலாளரை அல் அமீன் பள்ளி விவகாரத்தில் குறை கூறுகிறார், இதே அந்த நகர செயலாளர் தானே அன்றும் அப்பாதவியில் இருந்தார். அனால் அப்போது ஓட்டிற்காக அதை மறந்தார், இப்போது இதை விட பெரிய பதவியை அடைவதற்காக தி.மு.க நகர நிர்வாகிகளுடனும் மோதுகிறார். அவர் கொள்கை பிடிப்புள்ளவராக இருந்திதிருந்தால் முதலில் பல கட்சிகளில் போய் சீட்டு கேடிருக்க மாட்டார். அடுத்ததாக தன் கொள்கையில் எப்பொழுதுமே நிலைத்து நின்றிருப்பார்.

    அத்தோடு நில்லாமல் சமுதாய இயக்கங்களையும் குறை சொல்லி அவர்களையும் பழிவாங்க துடிக்கிறார், அதற்காகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப த.மு.மு.க வை அழிப்பதற்கு த.த.ஜ வோடு கூட்டு சேர்கிறார். முன்பு எஸ்.டி.பி.ஐ யை நாடிப்பார்த்தார், அவர்கள் முன்பு இவர்க்கு வாழ் பிடித்துபார்த்துவிட்டு பின்னர் சுதாகரித்துக்கொண்டார்கள்.

    ஏன் இவ்வளவு? இவர் சார்ந்திருக்கும் தி.மு.க மேல் இவருக்கு பற்றி இருந்தால், மயிலாடுதுறையில் இவர் சார்ந்துள்ள தி.மு.க.வின் கூட்டணி கட்சியான ம.ம.க வின் ஹைதர் அலி வெற்றி பெற வேண்டுமா அல்லது தோற்க வேண்டும் என்று அவரிடம் பேட்டி எடுத்து பாருங்கள், அப்பொழுது தெரியும் இவரின் உண்மை முகம்.

    கொள்கையே இல்லாமல், பதவியை மட்டுமே குறிவைத்து அரசியல் நடத்தும் இவர் எந்தக்கட்சியிலையும் நிலைக்க முடியாது என்பது திண்ணம்.

    உண்மையிலேயே அவர் ஊருக்கு சேவை செய்ய வேண்டும் என்றால், தனது பதவியை இப்பொழுதே ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் இடைத்தேர்தலில் நின்று சேர்மன் பதவிக்கு போட்டியிடட்டும் அப்பொழுது தெரியும் இவருக்கு மேல் உள்ள மக்களின் ஆதரவு.

    ReplyDelete
    Replies
    1. You dont have name? ur parents didnt name u???

      Delete
    2. name is note matter word is word is matter ,,,,, if you know name or now the person what you will do,,,, or what you want do.. if you can..you reply or explain

      Delete
    3. @முகம்மது ஆபிதீன், பெயர் போட்டு எழுதினால், ஒரு வேலை நீங்கள் தேர்தல் கையூட்டு ஏதும் கொடுக்கப்போறீங்களா?

      நீங்க கேட்கிற 'பெயர் போட்டு எழுது' என்பது அத்தப் பழசு. வேற சங்கதி இருந்தால் எழுதுங்கள்.

      யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமல்ல. என்ன எழுதுகிறார்கள் என்பது தான் முக்கியம்.

      Delete
    4. @Mohamed Abideen, Why do you always insist on name? Is your name published here true? Because I cant find your any identity except the name. If you are true person, then pls mention your name along with father name, street and current location before insist others.

      Don't behave smart

      Delete
    5. yainga neee sanda pottu kiringa less tension more work more work less tension

      Delete
  15. >>உண்மையிலேயே அவர் ஊருக்கு சேவை செய்ய வேண்டும் என்றால், தனது பதவியை இப்பொழுதே ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் இடைத்தேர்தலில் நின்று சேர்மன் பதவிக்கு போட்டியிடட்டும் அப்பொழுது தெரியும் இவருக்கு மேல் உள்ள மக்களின் ஆதரவு.<<

    நல்ல கோரிக்கை. எனினும், மீண்டும் 75 இலட்ச ரூபாய் செலவு செய்து பதவியை அடைய எத்தனைபேர் காத்துக் கொண்டிருக்கிறார்களோ?

    மதியாதார் தலைவாசல் மிதிக்காத, தன்மானத்திற்கு உளை வைக்கும், தம்மை மதியாத திமுகவிலிருந்து அஸ்லம் காக்கா தேர்தலுக்கு முன்பே வெளியேற வேண்டும்.

    ReplyDelete
  16. தலைவரே இரு இயக்கங்களை பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்.. அதாவது திராவிட கட்சிகள் இரு இயக்கங்களை ஓட்டுக்காக பயன்படுத்துகிறது என்று கூறினீர்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் என்கின்ற அமைப்பு அ.தி.மு.க விற்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. அதை பற்றி உங்களது கருத்தில்லையே ஏன்?? நீங்கள் தி.மு.க வில் இருந்துக் கொண்டு அ.தி.மு.க விற்கு மறைமுகமாக வேலை செய்வதாக தெரிகிறது..??
    அ.தி.மு.க பாரதிய சனாத உடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளது போல நீங்களும் தி.மு.க வில் இருந்துக் கொண்டு அ.தி.மு.க விற்கு ஆதரவு தெரிவிப்பது போல இருக்கின்றது.. ஏதும் கள்ள தொடர்பா அ.தி.மு.க வை போல்???????

    ReplyDelete
    Replies
    1. thambi adirai fan neega puriyama pasuringa tntj oru eyakkam ...sariya ongalukku yanna wandhuchi poi onga work ka mattum parukooo

      Delete
  17. அதிரை தந்தையாக முன்பு இருந்தவர்களின் செயல்பாடும் இவரின் செயல் பாடும் ஒப்பிட்டு தான் பார்க்க வேண்டும். MMS குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேர்மன் ஆக இருந்த போது அதிரை பேருந்து நிலையத்திற்கு அவரின் பெயரை சூடிக் கொண்டதை தான் சாதனை என சொல்லலாம்! தன்னுடைய வணிக வளாகத்தில் வியாபாரம் பாதிக்க கூடாது என்பதற்காக பேரூராட்சியில் கடைகள் கட்டவில்லை என்பதாக பேச்சு இருந்தது, பஸ் நிலையம் மாறாமல் இருப்பதற்கு அதுவும் காரணம் என மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
    இப்போது நிலைமை அவ்வாறு இல்லை. பதவி ஏற்றவுடன் சில அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் அதில் ஓன்று தான் பிளாஸ்டிக் பை, குப்பை தொட்டி வைத்தல். இதற்க்கு பொது மக்கள் ஆதவு எப்படி என்பது நமக்கு தெரியும். நல்ல திட்டங்கள் கொண்டு தான் வருகிறார் ஆனால் அருவடிகளின் குறுக்கீடு காரணாமாக திட்டம் தடை படுகிறது. இவர் எந்த கொள்கை உடையவர் என்பது முக்கியம் இல்லை இவரால் அரசு திட்டம் நிறைவேற முயற்சி செய்கிறாரா இல்லையா என்பது முக்கியம். ஒரு சின்ன காரியம் நிறைவேற நாமே லஞ்சம் கொடுக்கிறோம் ஆனால் ஒரு முக்கிய பதவிக்கு வர சில பேரை சரிகட்டி தான் ஆக வேண்டும். அதிரைக்கு மாற்றம் தந்தவர் சின்ன சிங்கப்பூர் ஆகாவிட்டாலும் பராவில்லை அடிப்படை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    ReplyDelete
  18. மஸ்தான் கனி அவர்களே சரியாக சொன்னீர் எந்த கொள்கை உடையவர் என்பது முக்கியம் இல்லை. அரசு திட்டம் நிறைவேற முயற்சி செய்கிறாரா இல்லையா என்பது முக்கியம். தன்னுடைய வணிக வளாகத்தில் வியாபாரம் பாதிக்க கூடாது என்பதற்காக பேரூராட்சியில் கடைகள் கட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. யாராக இருந்தாலும் சுயநலத்திற்காக அரசியலுக்கு வரக்கூடாது. மக்களாகிய எங்களின் அடிப்படை தேவையே நிறைவேற்றி தரக்கூடியவராகவும், ஊரின் முன்னேற்றதிற்கு பாடுபடகூடியவராகவும் இருக்கும் பட்சத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் ஆதரவு கொடுக்கலாம். ஊரின் வளர்ச்சியே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.