.

Pages

Thursday, August 28, 2014

பட்டுக்கோட்டையில் வெடிகள் பறிமுதல் ! 2 பேர் கைது !!

பட்டுக்கோட்டையில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.

பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் 2 இடங்களில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தஞ்சாவூர் திட்டமிட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் லக்குமணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீஸ் ஏட்டுகள் காமராஜ், செந்தில், சரவணன், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள 2 இடங்களை திடீர் சோதனையிட்டனர்.

சோதனையில் உரிமம் இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதில் அதிர்வேட்டு, மாப்பிள்ளை வெடி, நாட்டு வெடி, பேப்பர் வெடி, தோரண வெடி உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்ததாக மாணிக்கவாசகம் (வயது 53), வைரமணி (52) ஆகிய இருவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து இருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகரின் முக்கிய பகுதியில் இருந்து நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : தினத்தந்தி

4 comments:

  1. இவங்க வச்சா நாட்டு வெடி குண்டு இதையே நம்மவன் வைத்தால் வெடிகுண்டு! பக்க பக்கமா எழுதுவானுங்க இந்த தின பத்திரிகை -

    வெடி குண்டு வைத்திருந்தவர்களின் வயது 52, 53 இப்படி எழுதினால் சந்தேகம் வராதாம் - இது தான் பத்திரிகை தருமம்.

    வீடு இடிந்து மனிதன் சாவுவது தான் தமிழ் நாட்டின் இன்றைய நிகழ்வு.

    ReplyDelete
  2. fuck of,,, if muslims having match box they will create one kilometre destroy bombs,, we are the salves life living in indai

    ReplyDelete
  3. இது சம்பவம் உண்மை இந்த செய்தியை அதிரை நீயூஸை தவறி மற்ற மீடீயாக்கள் இருட்டடிப்பு செய்தது ஏன்? பிடிப்பட்டவரகள்.........?

    ReplyDelete
  4. ஏன்டா பரதேசிகளா....,
    உங்களுக்கு வந்தா இரத்தம்..,
    எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ....,,?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.