.

Pages

Sunday, August 24, 2014

சென்னை உண்ணாவிரத போராட்டத்தில் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு ! [ படங்கள் இணைப்பு ]

பல்கலை கழக ஆசிரியர் சங்கம் ( AUT  ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசிடம் 01-01-2006 முதல் பணியிலமர்ந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்கிடவும்,  அரசின் ஆணைகளை திருச்சி தேசியக்கல்லூரி, கரந்தை TUK கல்லூரி, கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல், கோவை CBM கல்லூரிக்கு தனி அலுவலரை நியமனம் செய்தல், ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதில் பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் கல்லூரி கிளை தலைவர் பேராசிரியர் முஹம்மது மொய்தீன், செயலாளர் பேராசிரியர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் பேராசிரியர் அப்பாஸ் உள்ளிட்ட தமிழகமெங்கும் வந்திருந்த பேராசிரியர் பேராசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.





     

1 comment:

  1. இதுபோன்ற போராட்டகள் அவர் அவர்களின் சொந்த வேலை மற்றும் பணிகள் சார்ந்தது.இவற்றை செய்திகளாக வெளியிடும் ஊடகங்கள் அவற்றை ஆதரிப்பதாகவே கருத்தில் கொள்ளப்படும் என்பதை நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.