.

Pages

Saturday, August 16, 2014

அதிரை நகர காங்கிரஸார் கொண்டாடிய சுதந்திர தின விழா !

இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா நேற்று [ 15-08-2014 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதிரை மெயின் ரோடு M.M.S வணிக வளாகத்தின் கார்னரில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடியை அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தலைவர் MMS சேக் நசுருதீன், நகர காங்கிரஸ் செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன், TIYA செயலாளர் நூர் முஹம்மது ( நூவன்னா ), நகர  இளைஞர்  காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஜலீலா ஜுவல்லரி முகைதீன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாக சென்று அங்கே அமைந்துள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கொடியேற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது.





2 comments:

  1. அன்புள்ளம் கொண்ட நாட்டு பற்று மிக்க அதிரை வலைதள சகோதரர்களே ............நமது நாட்டின சுதந்திர தின விழா கொண்ட்டாங்களை ஒட்டு மொத்த ஒரே விரிவான ஒரே பதிவில் நமதூரின் நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டால் அது அனைவருக்கும் நலம் ......வெளிநாட்டு வாசகர்கள் நேரமின்மை காரனமாக ஒவ்வொரு பதிவையும் உற்றுநோக்க எங்களுக்கு நேரமில்லை என்பதை அறிய தருகின்றோம் .

    ReplyDelete
  2. வெளிநாட்டு வாசகர்கள் நேரமின்மை காரனமாக ஒவ்வொரு பதிவையும் உற்றுநோக்க எங்களுக்கு நேரமில்லை என்பதை அறிய தருகின்றோம் . அது சரி எங்கலுக்கு மட்டும் நேரம் இருக்க? நாங்களும் பிஸிதன் நண்பரே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.