.

Pages

Saturday, August 16, 2014

அபுதாபி மற்றும் துபாயில் இந்திய சுதந்திர தின விழா !

துபாய் : அபுதாபி இந்திய தூதரகம் மற்றும் துபாய் இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா 15.08.2014 வெள்ளிக்கிழமை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் டி.பி. சீதாராமன் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பாரத குடியரசுத் தலைவரின் சுதந்திர தின  உரையினை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பாரத குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளானாலும் என்றும் இளமையாகவே இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அமீரகத்தில் விடுமுறை நாளாக இருந்த காரணத்தினால் இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
முதுவை ஹிதாயத்

1 comment:

  1. அன்புள்ளம் கொண்ட நாட்டு பற்று மிக்க அதிரை வலைதள சகோதரர்களே ............நமது நாட்டின சுதந்திர தின விழா கொண்ட்டாங்களை ஒட்டு மொத்த ஒரே விரிவான ஒரே பதிவில் நமதூரின் நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டால் அது அனைவருக்கும் நலம் ......வெளிநாட்டு வாசகர்கள் நேரமின்மை காரனமாக ஒவ்வொரு பதிவையும் உற்றுநோக்க எங்களுக்கு நேரமில்லை என்பதை அறிய தருகின்றோம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.