.

Pages

Sunday, August 31, 2014

அதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் [ படங்கள் இணைப்பு ]


இன்று மாலை அதிரை மற்றும் அதனை சுற்றி காணப்படும் கிராமங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பட்டது.

முன்னதாக பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை வழியாக வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்தடைந்தது. இதை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வண்டிபேட்டையிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று ஏரிபுறக்கரை கடலில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தஞ்சை மாவட்ட டிஐஜி சஞ்சய் குமார் தலைமையில், தஞ்சை மாவட்ட எஸ்.பி தர்மராஜன், திருவாரூர் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு காவல்படை, அதிரடிப்படை வீரர்கள் என சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பாதுகாப்பு பணிக்காக நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. வஜ்ரா போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியன தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்தது.






2 comments:

  1. இவ்வாராக பதற்றம்மிருந்தும் அமைதியாக நடந்து என்று எவ்வாறு கூறம்முடியும் படங்களை பார்க்கும் பொழுது இது காவல்துறைக்கு பெறிய சவாலாகதான் அமைந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. போலீஸ் காரர்களுக்கு ஒரு விசில் போடு !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.