இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு கட்டையை உடைத்து கொண்டு பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ்சின் முன்பகுதியில் பயணம் செய்த 8 பெண்களும் ஒரு ஆணும் படுகாயம் அடைந்தனர். அதைனைகண்ட அந்தவழியாக வாகனத்தில் சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து விபத்தில் சிக்கி உள்ளவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தஞ்சை டவுன் டி.எஸ்.பி. கண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளம்பரிதி மற்றும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டனர்.
பின்னர் தஞ்சை தீயணைப்புபடை வீரர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய பஸ் மற்றும் லாரியை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : மாலை மலர்
படங்கள் : யூசூப்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பொழுது விடிந்த உடனே இப்படியா.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com