பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அதிரை, பட்டுக்கோட்டை, கரம்பயம், மதுக்கூர், பேராவூரணி, ஆலத்தூர், அலிவலம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
14 வயதிற்குட்பட்டவர்கள், 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 630 மாணவர்களும், 514 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேன் மேலோர் பிரிவில் கலந்து கொண்ட பள்ளியின் 12 ம் வகுப்பு மாணவன் M. முஹம்மது ஆஷிப் 10 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். அதே போல் கிலோர் பிரிவில் 10 ம் வகுப்பு மாணவன் P. முத்துராசு கலந்து கொண்டு 16 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். மொத்தம் 59 புள்ளிகள் பெற்று பள்ளி முதலிடம் பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்டளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் கீலோர் பிரிவில் முஷாரப், மேலோர் பிரிவில் பயாஸ் அஹ்மது, முஹம்மது அர்சாத், முஹம்மது ராசித் அலி, சேக் முஹம்மது, மேன்மேலோர் பிரிவில் அப்துல் பாசித், சாதுலி, முஹம்மது ஆசிப், காளிதாஸ் ஆகியோர் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்து தந்துள்ளனர். .
போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டங்களை வென்ற பள்ளி மாணவர்களுக்கும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் - தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் A. மஹபூப் அலி அவர்களை அருமையான மாலை பொழுதில் அதிரை நியூஸ் சார்பில் சந்தித்து வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டு விளையாட்டு போட்டிகளில் பள்ளி சாதனை நிகழ்த்தியது குறித்து கேட்டறிந்தோம்.
Congratulations
ReplyDeleteWell done boys
ReplyDeletevaalthukal boys
ReplyDeleteவெற்றி பெற்ற மாணவர்களை பற்றி கொஞ்சம் விபரமாக கூறினால் வாழ்த்துக்கள் அவர்கள் சார்ந்த தெருவுக்கும் அவர்கள் பெற்றோருக்கு போய் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.
ReplyDeleteFazee Canada
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete