.

Pages

Wednesday, August 27, 2014

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை !

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அதிரை மனித உரிமைகள் கழக அமைப்பாளர் OKM சிபஹத்துல்லாஹ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அனுபியுள்ளனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈசிஆர் சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. கழிவு நீர் செல்லும் வாய்க்கால் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.இதனால் கழிவு நீர் தேங்கி கானபடுவதால் துர்நாற்றம் வீசுகின்றது. இப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் வணிகர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக பலமுறை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பழுதடைந்த சாலையை சீரமைக்கப்படவில்லை. சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதே நிலை நீடித்தால் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படும். பழுதடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து, சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. நிர்வாகி என்றால் என்ன ? அவர் பொறுப்பு என்ன?

    ReplyDelete
  2. Appaven manaive yaar?
    ammaven kanavar yar?
    eppade eleea eekkuthu.
    asraf Ali comment

    ReplyDelete
  3. OKM Sikabathullaah Machan, Your are the one serving great social service in our home town in without any expectation . The problem will be solved soon........which is you are required by the district collector.

    ReplyDelete
  4. //பலமுறை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பழுதடைந்த சாலையை சீரமைக்கப்படவில்லை. சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதே நிலை நீடித்தால் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படும். பழுதடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து, சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்// இதனைபடிக்க நான் கருத்திட்டேன் //நிர்வாகி என்றால் என்ன ? அவர் பொறுப்பு என்ன?// என்று இதற்க்கு
    shahul hameed27 August 2014 13:50
    Appaven manaive yaar?
    ammaven kanavar yar?
    eppade eleea eekkuthu.
    asraf Ali comment இவ்வாறு எதோ ஜனாப்.சாகுல் ஹமீது அவர்கள் எழுதி உள்ளார். எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.