.

Pages

Sunday, August 31, 2014

முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு !

தஞ்சையில் இன்று மாலை முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன், மாநில பொதுசெயலாளர் அபூபக்கர், துணை தலைவர் அதிரை SSB நசுருதீன், துணைசெயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாவட்ட பொருளாளர்   மதுக்கூர் அப்துல் காதர், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், அதிரை நகர தலைவர் K.K. ஹாஜா  A. சேக் அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது  உள்ளிட்ட ஏராளமான மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சியின் நிர்வாக தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுப் பரிந்துரையின்படி தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாகப் பிரித்து அமைப்புக் குழு அமைப்பது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






2 comments:

  1. மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் சென்ற நாடாளமன்ற தேர்தலில் இஸ்லாத்தில் நோன்பு,தொழுகை எப்படி பர்லுலோ அதேபோல் கலைஞருக்கு ஓட்டு போடுவதும்தான் என்று கூறி அல்லாஹுவின் சாபத்ரிக்கு ஆளாகிவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. புகழுவதைவறம்பு மீறியதும் வார்த்தையின் நிதானம்தெறியவில்லையோ என்னம்மோ ஆனால் இதுவறையளும் மக்கள்மத்தியில் வறுந்தவும்மில்லை ஆனாலும் ம...க்கள் தலைவராக ஏற்றிருப்பதுதான் வேதனை!

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.