.

Pages

Wednesday, August 27, 2014

அதிரை கடற்கரை இட ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் தடுத்து நிறுத்தியும் மீண்டும் ஆக்கிரமனம் ! அதிரடியாக களத்தில் இறங்கிய அதிரை TNTJ அமைப்பினர் !!

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து நேராக கடற்கரைக்கு செல்லும் கஸ்டம்ஸ் சாலையின் முடிவில் வலதுபுறத்தில் அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. இதில் பண்டிகை காலங்களில் அனைத்து தரப்பு பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இந்த பகுதியில் ஏராளமான மணல் குமிந்து சுற்றுலா தளமாக காட்சியளித்தது. சுனாமி தடுப்புக்காக அரசு சார்பில் ஏராளமான சவுக்கு மரங்களும் நடப்பட்டது.

அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறால் பண்ணை அமைப்பதற்காக சிலர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகர் அன்வர் அலி அவர்களால் அரசு அலுவலருக்கு தொலைபேசியில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் அலுவலர் பழனிவேல், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் மகரஜோதி, அதிரை காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதுகுறித்து அதிரை நியூஸில் புகைப்படங்களுடன் கடந்த [ 19-05-2014 ] அன்று செய்தியாக வெளியிடப்பட்டது.

செய்தியைக் காண்க :
'அதிரையில் கடற்கரையோர அரசு நிலம் ஆக்கிரமிப்பை அதிரடியாக தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள் !'

இந்நிலையில் இந்த நிலத்தில் மீண்டும் இறால் பண்ணை அமைக்கப்பட்டு அதற்குரிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை அறிந்து கொண்ட  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகர் அன்வர் அலி அவர்கள், அதிரை கிளை செயலாளர் S.P பக்கீர் முஹம்மது, துணை செயலாளர் A.K.S நவாஸ்கான், நகர மருத்துவ அணி செயலாளர் ஹாஜி முஹம்மது, சகாபுதீன் ஆகியரோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்பு முழுவதையும் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் பொதுநலன் கருதி இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் மாவட்டம் மற்றும் தலைமையகத்தின் அனுமதியோடு அரசு இடத்தை மீண்டும் ஆக்கிரமனம் செய்தோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகர் அன்வர் அலி கூறியதாவது... 






படங்கள் மற்றும் வீடியோ உதவி : 
AKS நவாஸ், SP பக்கீர் முகமது

6 comments:

  1. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் அரசு அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் பெரும்பாலும் நடக்குது,

    தட்டிக்கேட்கும் சமூக ஆதரவாளர்களுக்கு எதோ ஒருவகையில் பின்னர் தொள்ளை கொடுப்பதை காணலாம், இவர்களின் முயற்சிக்கு பொது மக்கள் ஆதரவு கொடுக்க முன்வரவேண்டும்.

    ReplyDelete
  2. //மஸ்தான் கனி27 August 2014 20:10
    ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் அரசு அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் பெரும்பாலும் நடக்குது,

    தட்டிக்கேட்கும் சமூக ஆதரவாளர்களுக்கு எதோ ஒருவகையில் பின்னர் தொள்ளை கொடுப்பதை காணலாம், இவர்களின் முயற்சிக்கு பொது மக்கள் ஆதரவு கொடுக்க முன்வரவேண்டும்.//

    தட்டிக்கேட்கும் சமூக ஆதரவாளர்களுக்கு எதோ ஒருவகையில் பின்னர் தொள்ளை கொடுப்பதை காணலாம் கொடுததுபார்கட்டும் உலகளவில் பரந்துவாழும் அதிரையர்கள் யாரும் இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல .........

    ReplyDelete
    Replies
    1. What about your area please clear your neighbour please ..

      Delete
  3. இனிவரும் சந்ததிகளுக்கு அதிரையில் கடல் கறை இருக்காது , பொதுவாகவே பெரிய இடங்களை வழக்கில் சொல்லும் பொழுது கடல் என்பார்கள் இங்கு கடலோரம்மோ காணாமல் போய்விட்டது.

    ReplyDelete
  4. இதை அதிரை மக்களுடைய ஒத்துழைப்போடு தகுந்த அரசு அதிகாரிகளை சந்தித்து இவ்ஆக்கிரமிப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை அவர்களை இனம் காண வேண்டும்.

    ReplyDelete
  5. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் அரசு அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் பெரும்பாலும் நடக்குது,

    தட்டிக்கேட்கும் சமூக ஆதரவாளர்களுக்கு எதோ ஒருவகையில் பின்னர் தொள்ளை கொடுப்பதை காணலாம், இவர்களின் முயற்சிக்கு பொது மக்கள் ஆதரவு கொடுக்க முன்வரவேண்டும்.

    இதை அதிரை மக்களுடைய ஒத்துழைப்போடு தகுந்த அரசு அதிகாரிகளை சந்தித்து இவ்ஆக்கிரமிப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை அவர்களை இனம் காண வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.