.

Pages

Wednesday, August 13, 2014

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சை தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி முன்னிலை வகித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் பள்ளியின் சார்பில் 2013-2014 –ம் கல்வியாண்டில் 12–ம் வகுப்பு தேர்வு எழுதிய 135 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

முன்னதாக வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன் வரவேற்று பேசினார்.

இதில் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் முஹம்மது தமீம், கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன், முதுகலை ஆசிரியர் அசரப், மாஜுதீன், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன், அதிமுக நகர இளைஞர் பாசறை பொறுப்பாளர் அஹமது தாஹிர், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர் சேனா மூனா ஹாஜா முஹைதீன், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பள்ளியின் அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







3 comments:

  1. இலவச மடிக்கணினி அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இந்த வருடம் வரைகொடுக்கபடவில்லை. அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  2. ஆச்சரியம்! ஆனாலும் உண்மை இலவசங்கள் அவ்வப்போது அதிரையிலும்
    தெரன்படுகிறது.

    ReplyDelete
  3. Free Laptop issuing only Government schools, and Government Aided Schools(KM Boys) only, But The KM Girls(Only +1,+2),Imam Shafi schools are Private Schools. So Government not proposed to give these type of schools.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.