இன்று பகல் தஞ்சையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்து பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் என்ற கிராமத்தின் அருகே வந்த போது அதே சாலையில் மது பானங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி பேருந்தின் பின்பக்கமாக மோதியதில் பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்தது. காயங்கள் யாருக்கும் ஏற்பட வில்லை என்றாலும் பேருந்தில் பயணமான பயணிகள் லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
மதுபானங்கள் ஏற்றி வந்த லாரியின் முன்புற கண்ணாடியும், லாரியில் இருந்த மதுபானங்களும் உடைந்து கீழே கொட்டியது. தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள் : இப்ராஹிம் அலி
மதுபானங்கள் ஏற்றி வந்த லாரியின் முன்புற கண்ணாடியும், லாரியில் இருந்த மதுபானங்களும் உடைந்து கீழே கொட்டியது. தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள் : இப்ராஹிம் அலி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.