.

Pages

Friday, August 22, 2014

புதிதாக துவங்கிய AJ பள்ளி ஜும்மா தொழுகைக்கு திரண்ட வந்த அதிரையர்கள் !

AJ நகரில் அமைந்துள்ள AJ பள்ளியில் முதல் ஜும்மா தொழுகை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது.

AJ நகர் பொதுமக்களின் வேண்டுகோளுகிணங்கவும், அதிரை உலமா சபை மற்றும் அதிரை நகர ஜமாத்தினரின் ஒத்துழைப்புடனும் இன்று ( 22-08-2014 ) வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை துவங்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வார ஜும்மா தொழுகை சிறப்பாக நடந்து முடிந்தது.

பேராசிரியர் பர்கத் அவர்களின் சிறப்புரையோடு துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து ஜும்மா பயான் நடைபெற்றது. இதில் இத்ரீஸ் ஆலிம் உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து குத்பா உரை மற்றும் ஜும்மா தொழுகை நடைபெற்றது. இவற்றை பள்ளியின் இமாம் முஹம்மது ஹுசைன் நடத்தி வைத்தார்.

இதில் அதிரையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பல்வேறு பகுதியிலிருந்த வந்த பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக தொழுகைக்கு வந்திருந்த அனைவருக்கும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. தொலை தூரத்திலிருந்து வந்த ஏராளமானோர் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி இருந்ததால் வாகன நெருக்கடி ஏற்பட்டது.

இடவசதிக்காக மேல் மாடியிலும், சாலையோரத்தில் போடப்பட்ட பந்தலிலும், புதிதாக கட்டப்பட்ட அல் ஹிதாயா மகதப் மதரசாவிலும் அமர வைக்கப்பட்டனர். பள்ளியின் நிர்வாகிகள் சார்பில் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செய்தி மற்றும் படங்கள் : 
நூர் முஹம்மது ( நூவன்னா )









7 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.