பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி-கார்காவயல் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், ரத்த தான முகாம் ஆகியவை நடைபெற்றது.
கோட்டை ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ கழக பட்டுக்கோட்டை கிளை, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, துணை இயக்குநர்-தொழுநோய் பிரிவு தஞ்சை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் (மண்டலம்-21) டாக்டர் சி.வி.பத்மானந்தன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பொறியாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்காவயல் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மருத்துவர்கள் செல்லப்பன், சுப்பிரமணியன், அய்யாசாமி, குணசீலன், ரெத்னா சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், முருகானந்தன், ராஜேஸ், புகழேந்தி, லெட்சுமிகாந்த், சங்கீதா கணேஷ், மேகலா, அறிவழகன், சரண்யா, ஶ்ரீநாத் உள்ளிட்ட 15 பல்துறை மருத்துவ நிபுணர்களும் சுமார் 410 நோயாளிகளுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
முகாமில் 30 செவிலியர்களும், ஜீவன் நர்சிங் நிறுவனம், அன்னை ரத்த பரிசோதனை மையம் மற்றும் கிரேஸ் மருத்துவ மைய மாணவிகள் இணைந்து இசிஜி, ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர்.
ரத்த தான முகாமில் மாணவ,மாணவியர்,ஆசிரியர்கள் உட்பட
35 பேர் குருதிக்கொடை அளித்தனர். மேலும் முகாமில் டெங்கு காய்ச்சல், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள், சித்த வைத்திய முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இமானுவேல் ராஜ், கணேசன், தேவசகாயம், டாக்டர் சம்பத்குமார், மொகிதீன் அப்துல் காதர், ஜெயசீலன், பூபதி, கிக்காராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை
தடுக்கும் வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
கோட்டை ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ கழக பட்டுக்கோட்டை கிளை, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, துணை இயக்குநர்-தொழுநோய் பிரிவு தஞ்சை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் (மண்டலம்-21) டாக்டர் சி.வி.பத்மானந்தன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பொறியாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்காவயல் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மருத்துவர்கள் செல்லப்பன், சுப்பிரமணியன், அய்யாசாமி, குணசீலன், ரெத்னா சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், முருகானந்தன், ராஜேஸ், புகழேந்தி, லெட்சுமிகாந்த், சங்கீதா கணேஷ், மேகலா, அறிவழகன், சரண்யா, ஶ்ரீநாத் உள்ளிட்ட 15 பல்துறை மருத்துவ நிபுணர்களும் சுமார் 410 நோயாளிகளுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
முகாமில் 30 செவிலியர்களும், ஜீவன் நர்சிங் நிறுவனம், அன்னை ரத்த பரிசோதனை மையம் மற்றும் கிரேஸ் மருத்துவ மைய மாணவிகள் இணைந்து இசிஜி, ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர்.
ரத்த தான முகாமில் மாணவ,மாணவியர்,ஆசிரியர்கள் உட்பட
35 பேர் குருதிக்கொடை அளித்தனர். மேலும் முகாமில் டெங்கு காய்ச்சல், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள், சித்த வைத்திய முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இமானுவேல் ராஜ், கணேசன், தேவசகாயம், டாக்டர் சம்பத்குமார், மொகிதீன் அப்துல் காதர், ஜெயசீலன், பூபதி, கிக்காராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை
தடுக்கும் வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
செய்தி : எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.