.

Pages

Saturday, August 16, 2014

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டது !

இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா நேற்று [ 15-08-2014 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் ( NSS ) சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன், பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், இடை நிலை ஆசிரியர் ஆஷா மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள் : 
நூர் முஹம்மது [ நூவன்னா ]





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.